பக்கம்:வேலை நிறுத்தம் ஏன்.pdf/111

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

77() வேலை நிறுத்தம் ஏன்? மறக்காமல் வைரக் கம்மல்களைக் கழற்றி அவசரம் அவசரமாகத் துடைத்துப் போட்டுக் கொண்டு வராந்தாவுக்கு வந்தாள் வாசல் பூராவும் ஒரே கார் மயமாக இருந்தது - ஒன்றையொன்று முந்தி உள்ளே நுழைய அவை போட்டியிட்டுக் கொண்டிருந்தன. அவற்றைக் கடந்து மேலே செல்ல முடியாமல் மாட்டு வண்டிகளும் ஜட்கா வண்டிகளும், சைக்கிள்களும் ரிக்ஷாக்களும் தவித்துக் கொண்டிருந்தன. போக்கு வரத்துப் போலீஸார் அடிக்கடி விளலில் அடிப்பதும். நம்பர் வாரியாகக் கார்களை அழைத்து வரிசைக் கிரமமாக அவற்றை நிறுத்தி வைப்பதுமாக இருந்தனர் "ஏன் இந்தக் கூட்டம், ஏன் இந்த ரகளை?” ஒன்றுமே புரியவில்லை, குஞ்சம்மாளுக்கு! அதிலும் வருபவர்கள் சாதாரண ஆசாமிகளா யிருந்தாலும் பரவாயில்லை; படே படே ப்ரொட்யூஸர்கள்! - அவர்களை எப்படி வரவேற்பது? அத்தனை பேரையும் எங்கே உட்கார வைப்பது? - எந்த முறையில் அவர்களை உபசரிப்பது? - பெரிய பிரச்சனை யாகவல்லவா போய்விட்டது? இத்தனைக்கும் பொழுதுகூட இன்னும் சரியாக விடியவில்லையே!