பக்கம்:வேலை நிறுத்தம் ஏன்.pdf/112

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

விந்தன் 777 இந்தக் கவலையில் அவள் மூழ்கியிருந்த போது, "குட் மார்னிங்" என்ற குரல் கேட்டுத் திரும்பினாள். நெற்றி வியர்வையை வழித்து நிலத்தில் விட்டபடி, இன்ஸ்பெக்டர் சிரித்துக் கொண்டே, இன்று என்ன விசேஷம்?" என்று கேட்டார். து.ாக்கி வாரிப் போட்டது குஞ்சம்மாளுக்கு. "என்ன கேட்கிறீர்கள்? - விசேஷமாஇருங்கள், இதோ வந்து விட்டேன்!" என்று தடுமாறிக்கொண்டே அவள் மாடிக்கு ஓடினாள் - மகளைக் கேட்கத்தான்! அங்கே அவள் படுக்கை காலியா யிருந்தது. ஏமாற்றத்துடன் திரும்பியபோது கையில் விளக்கு மாறுடன் வேலைக்காரி உள்ளே நுழைந்தாள் "எண்டி, அம்மாவைப் பார்த்தாயா?" "ஒ, பார்த்தேனே - பாத் ரூமூக்குப் போய் இருக்காங்க!" அவ்வளவுதான் ஒடோடியும் சென்று பாத் - ரூம்' கதவைத் தட்டினாள். "யாரது...?" 'நான்தாண்டி, கண்ணு! கொஞ்சம் கதவைத் திறேன்?"