பக்கம்:வேலை நிறுத்தம் ஏன்.pdf/120

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

"அந்த வயிற்றெரிச்சலை ஏன் கேட்கிறீர்? பயல் நம்மை முந்திக் கொண்டு விட்டான், ஸார்!" என்றார் இன்னொரு கனவான். 'அதற்குள் ஸ்பான்ஜைக் கொண்டு போய்க் கொடுத்து விட்டானா, என்ன?” 'இல்லை; நேற்று அந்தப் பயல்தான் லீலாவின் ஜாக்கெட்டைக் கழற்றினானாம்!" "நிஜமாகவா சொல்கிறீர்கள்?" "ஆமாம் ஐயா, ஆமாம்!" "அவன் கையை வெட்ட வேண்டும், ஸார்!" "அவளே வெட்டாதபோது நீர் எதற்கு வெட்ட வேண்டும்?" 'இல்லையென்றால் அவளுக்காக நாம் காத்து இருப்பதுதான் மிச்சமாயிருக்கும்!" 'நேற்றுதான் போனாற் போகிறதென்று விட்டேன் - இன்று விடுவேனா?" "எதை விட மாட்டேன் என்கிறீர்?"