பக்கம்:வேலை நிறுத்தம் ஏன்.pdf/121

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

720 வேலை நிறுத்தம் ஏன்? அவ்வளவுதான்; வந்தது மோசம்! - அவர் தன் தவறை உணர்ந்தார் - என்ன தவறு என்கிறீர்களா? - தான் மட்டுந்தான் நிசி லீலாவுக்கு ஸ்பான்ஜ் வாங்கிக் கொண்டு வந்திருப்பதாக அவர் நினைத்துக் கொண்டு இருந்த தவறுதான்! - பாவம், அங்கே கூடியிருந்த அத்தனை பேரும் அப்படித்தான் நினைத்துக் கொண்டு இருந்தார்கள் என்பது அவருக்குத் தெரியாது - என்ன செய்வார்? "எதை விடமாட்டேன் என்கிறீர்?" என்று அவர் திடீரென்று கேட்டதும் இவர் திடுக்கிட்டு, "ஒன்று மில்லை, ஒன்றுமில்லை." என்று பின் வாங்கினார். "சரிதான், நீரும் ஸ்பான்ஜ் வாங்கிக் கொண்டு வந்திருக்கிறீரா?" 'நானும் வாங்கிக் கொண்டு வந்திருக்கிறேன் என்று சொல்லுமே! நீரும் வாங்கிக்கொண்டு வந்திருக்கிறீரா? என்று கேட்டு என் வயிற்றெரிச்சலை ஏன் கொட்டிக் கொள்கிறீர்?" என்றார் இவர் இவர்களைப் போலவே அங்கிருந்த அனைவரும் ஒருவரிடம் ஒருவர் தங்களுக்குத் தெரியாமலே அகப்பட்டுக்கொண்டு விழித்த போது, "பாம்பாம், பம்பாம்பாம்! என்று ஹாரன் அடித்துக் கொண்டே போக்குவரத்துப் போலீஸாரைக்கூடப் பொருட் படுத்தாமல் படாதிபதி பத்மநாபனின் கார் வாயு வேக மனோ வேகமாக வந்து உள்ளே நுழைந்தது