பக்கம்:வேலை நிறுத்தம் ஏன்.pdf/126

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

விந்தன் 725 அவ்வளவுதான் - ஒட முயன்ற தன்னைக் கை பற்றி இழுக்க வந்த குஞ்சம்மாளை அவர் ஒரு தள்ளுத் தள்ளிவிட்டு, நாலே எட்டில் மாடியை அடைந்து விட்டார்! அங்கே, குளித்து முடித்து அப்பொழுதுதான் உடம்பைத் துடைத்துக் கொண்டிருந்த லீலாவைக் கண்டதும் பத்மநாபனுக்கு ஒரே ஏமாற்றமாயிருந்தது. "எல்லாம் அந்தக் குஞ்சம்மாளால் வந்த வினை!" என்று கையிலிருந்த "ஸ்பான்ஜைக் கீழே வீட்டெறிந்தார். விஷயத்தைப் புரிந்துகொண்ட நட்சத்திரம் 'விலையுயர்ந்த சிரிப்புடன் அதை எடுத்து டீபாயின் மேல் வைத்துவிட்டுத் தன் கையிலிருந்த 'டர்க்கி டவ'லை அவரிடம் போனாற் போகிறதென்று கொடுத்தாள்! தீர்ந்தது கோபம் பத்மநாபனுக்கு ஆனந்த பரவசத்துடன் தன் சிரமங்கள் அத்தனையையும் அந்தக் கணமே மறந்துவிட்டு, டவலுக்குக்கூட வலிக்காமல் அவள் உடம்பைத் துடைக்க ஆரம்பித்து விட்டார் அவர். அதற்குள் தலையைச் சீவிக் கொண்டு துடைத்த துண்டை வாங்கி மேலே போட்டுக் கொண்டு,