பக்கம்:வேலை நிறுத்தம் ஏன்.pdf/133

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

732 வேலை நிறுத்தம் ஏன்? 'அதற்குள்ளே மறந்துவிட்டீர்களா? அப்படி யானால் சொல்ல மாட்டேன், போங்கள்!" "நானும் கேட்க மாட்டேன், போ!" இருவரும் ஒருவரை யொருவர் ஒரு கணம் பார்க்காமல் இருந்தனர் மறுகணம் ஒருவரை யொருவர் அறியாமல் பார்த்துப் புன்னகை பூத்தனர். "நான் 'டு விட்டுவிடுவேன்!" என்று அவள் அவரைப் பயமுறுத்தினாள். 'நானும் 'டு விட்டுவிடுவேன்!" என்று அவர் அவளைப் பயமுறுத்தினார். "ஒன் டு." "ஐயோ, வேண்டாம் - பேசு, லீலா பேசு!" என்று கெஞ்சினார் அவர். "கேளு ராஜா, கேளு!" என்று கொஞ்சினாள் அவள், "சரி, சொல்லு!" "நிஜமாகவே உங்களுக்கு ஞாபகமில்லையா, ட்ரீம் லேண்ட் ப்ரோக்ராம்?"