பக்கம்:வேலை நிறுத்தம் ஏன்.pdf/153

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

752 வேலை நிறுத்தம் ஏன்? பத்திரிகையில் உங்கள் விளம்பரத்தைப் பார்த்தேன். " என்று ஆரம்பிக்கும்போதே அவனுடைய தோற்றத்தையும் துணிவையும் கவனித்த பத்மநாபன் அவனுக்கு உடனே வேலை கொடுத்து விடுகிறார்: அதிலிருந்து பத்மநாபனைக் காக்கா பிடிக்கும் விஷயத்தில் பீதாம்பரத்தக்கும் ஓ.கே.ய்க்கும் கடுமை யான போட்டி இருந்து வருகிறது எனினும் வெற்றி மட்டும் ஓ.கே.ய்க்கே கிடைத்து வருகிறது. இந்த நிலையில் பத்மநாபன் அன்புக்கு -இல்லை, தொழிலுக்குப் பாத்திரமான பிரபல நட்சத்திரம் ஒன்று - அதன் பெயர் நிசிலிலா பேரபாயத்துக்குள்ளாகிறது - அதாவது, ஜாலிவுட்டைச் சேர்ந்த 'கோலாகலா ஸ்டுடியோவில் அந்த விபத்து நேருகிறது. படாதிபதியின் அத்தனை பேரையும் தூண்டிற் புழு வாய்த் துடிக்க வைத்த அந்த விபத்து என்ன வென்றால், ஒரு நாள் ஷஅட்டிங் முடிந்ததும், தான் அணிந்து கொண்டிருந்த ஜிகினா ஜாக்கெட்டை அவள் அவசர அவசரமாகக் கழற்றுகிறாள். அப்போது அந்த நட்சத்திரத்தின் விரல்களில் ஒன்றில் ஜிகினா கீறிவிடுகிறது. அதிலிருந்து கசிந்த ரத்தத்தைக் கண்டதும் படாதிபதி பத்மநாபன் தனது கண்களில் ரத்தம் கசிய ஓடோடியும் வந்து, அந்த ஆக்ஸிடெண்டுக்குக் காரணம் என்னவென்று கேட்கிறார்