பக்கம்:வேலை நிறுத்தம் ஏன்.pdf/19

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

73 வேலை நிறுத்தம் ஏன்? கொண்டு, "எழுத்தறிவித்தவன் இறைவன் ஆகும்" என்னும் முதுமொழிக்குப் பாத்திரமான உபாத்தி யாயர்கள்கூட வேலை நிறுத்தம் செய்கிறார்கள்! போகட்டும்; இவர்களுக்காவது சர்க்கார் சட்டத்தை நிலை நாட்டும் பொறுப்போ, நாட்டின் அமைதியைக் காக்கும் கடமையோ ஒன்றும் கிடையாது. அந்தப் பொல்லாத போலீஸார் இருக்கிறார்களே, அவர்களுக்குக் கூடவா மேற்கூறிய பொறுப்பும் கடமையும் இல்லாமற் போய்விட்டன? தங்களை நம்பியிருக்கும் சர்க்காரை அவர்கள்கூடக் கைவிட்டு விடுவார்கள் என்று யாராவது எதிர்பார்த்து இருக்க முடியுமா? ஆனாலும் என்ன, அந்த எதிர் பாராத அதிசயம் ஒரு நாள் நடந்தே நடந்துவிட்டது. அன்று போலீஸார் வேலை நிறுத்தம் செய்ததோடு நில்லாமல், தாங்கள் அத்தனை நாளும் பெற்று வந்த அதி மர்மமான சம்பள விகிதத்தையும் அம்பலப்படுத்தி, சர்க்காரின் மானத்தை வாங்கி விட்டார்கள் (அரசு இயந்திரங்களின் செயல்பாட்டைக் குறிப்பிடுகிறார். இன்றும் இந்நிலை தொடர்கிறதே)