பக்கம்:வேலை நிறுத்தம் ஏன்.pdf/32

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

விந்தன் 37 வாழ்வதா, சாவதா ? இந்தக் காலத்தில் சம்பள உயர்வு கோரி வேலை நிறுத்தம் செய்யும் தொழிலாளிகளை ஈவிரக்கமின்றி எதிர்க்கும் புண்ணியவான்கள், அவர் களுடைய வாழ்க்கைத் தேவையைப் பற்றிக் கொஞ்சமாவது யோசித்துப் பார்க்க வேண்டும் சர்க்கார் கொடுக்கும் ரேஷன் விகிதப்படி ஒர் ஆசாமிக்கு மாதம் ஒன்றுக்கு ஏழு படி அரிசி ஆகிறது ஒவ்வொரு குடும்பத்திலும் புருஷன், மனைவி, வயோதிகத் தாய் அல்லது தந்தை, குழந்தைகள் - இல்லை யென்றால், வயது வந்த தங்கைமார், அல்லது விதவைச் சகோதரி - ஆகக் குறைந்த பட்சம் ஐந்து ஜீவன்களாவது இருக்கும் அந்த ஐந்து ஜீவன்களுக்கும் சர்க்காரின் அரை வயிறு நிரம்பக் கூடிய ரேஷன் விகிதப்படி பார்த்தாலும்