பக்கம்:வேலை நிறுத்தம் ஏன்.pdf/38

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

விந்தன் 37 ஆசையை அடக்கும் விஷயத்தில் எந்த நாட்டு மக்களும் இந்த நாட்டு மக்களுடன் போட்டி போட முடியாது. பெரும்பாலான இந்தியத் தொழிலாளிகள் தாங்கள் வசதியுடன் வாழ்வதற்குத் தனி வீடு வேண்டு மென்று கனவிலும் கருதுவதில்லை. விருந்தினர்கள் வந்தால் தங்குவதற்கும், வீட்டில் உள்ளவர்கள் உண்பதற்கும், குழந்தைகள் படிப்பதற்கும், இரவில் படுப்பதற்கும் தனித் தனி அறைகளுடன் வாழும் ஒரே ஒரு தொழிலாளியையாவது நம் நாட்டில் காண முடியாது. எந்த இந்தியத் தொழிலாளியின் வீட்டுத் தரையிலும் ரத்தினக் கம்பளங்கள் விரிக்கப் பட்டிருப்பதில்லை. கண்ணாடி ஜன்னல்களோ, அவற்றை வர்ண விசித்திரமான திரைகளோ அலங்கரிப்பதில்லை. கண்ணைப் பறிக்கும் மின்சார விளக்குகளோ, வாரிவிட்ட தலையைக் கலைக்கும் மின்சார விசிறிகளோ வேண்டுமென்று எந்த இந்தியத் தொழிலாளியும் கேட்பதில்லை. பொழுது போக்குவதற்கு ரேடியோ இல்லையே, நினைத்த இடத்துக்குப் போவதற்குக் கார் இல்லையே என்று எந்த இந்தியத் தொழிலாளியும் ஏங்குவது கிடையாது.