பக்கம்:வேலை நிறுத்தம் ஏன்.pdf/40

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பொதுஜனத் தலைவர்கள் ரதிர்ஷ்ட வசமாக இந்த நாட்டில் இன்று பிரபலமடைந்திருக்கும் பொதுஜனத் தலைவர்களில் பெரும்பாலோர், ஏழைத் தொழிலாளிகளின் உண்மையான வாழ்க்கை நிலையை அறியாதவர்கள்: அறிய முடியாதவர்கள் ! ஏனெனில், மேற்கூறிய தலைவர்களின் வாழ்க்கைக்கும் தொழிலாளிகளின் வாழ்க்கைக்கும் மலைக்கும் மடுவுக்குமுள்ள வித்தியாசம் இருக்கிறது. பசித்தவனுடைய வேதனையைப் பசித்தவன்தான் அறியமுடியும், பசியாதவன் அறிய முடியாது. அதே மாதிரி பசியாதவனுடைய சுகத்தைப் பசியாதவன்தான் உணர முடியும், பசித்தவன் உணர முடியாது. சில சமயம் மேற்கூறிய தலைவர்கள் ஏழைத் தொழிலாளிகளின் கஷ்ட நஷ்டங்களைப் பற்றிப் பேசுகிறார்களே என்றால்,