பக்கம்:வேலை நிறுத்தம் ஏன்.pdf/49

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

48 வேலை நிறுத்தம் ஏன்? 8 அடக்குமுறைத் தாண்டவம் 영m காலத்தில் இந்த அடிமை நாட்டு மக்களின் உள்ளத்திலே சுதந்திர ஆர்வத்தைத் துண்டி விடுவதற்கு அரும்பாடு பட்டது காங்கிரஸ், அவரவர்கள் உரிமையைப் பாதுகாத்துக் கொள் வதற்காகச் சட்டத்தை மீறுவதற்கும் தைரியமளித்தவர் காந்திஜி. இதன் பயனாகத் தேச மக்கள் திரண்டெழுந்தனர்; உரிமைப் போர் மூண்டது. அதிகார வர்க்கம், அமைதியை நிலை நாட்டுகிறோம்" என்று சொல்லிக் கொண்டு, தன் மிருகத்தனமான அடக்கு முறைகளைப் பிரயோகித்தது. எத்தனையோ அவசரச் சட்டங்கள் ஒன்றன் பின் ஒன்றாகப் பிறந்துகொண்டே யிருந்தன. அப்பொழுதெல்லாம் இந்த அடக்குமுறைகளைக் கண்டித்துக் காரசாரமாகப் பேசாதவர் யாரும்