பக்கம்:வேலை நிறுத்தம் ஏன்.pdf/53

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

52 வேலை நிறுத்தம் ஏன்? 9 அமைதிக்குப் பங்கம் யாரால்? தொழிலாளிகள் வேலை நிறுத்தம் செய்வ தென்பது சிலர் நினைப்பது போல் அவ்வளவு சர்வ சாதாரணமான விஷயமல்ல. வேலை நிறுத்தத்தால் தொழிலாளிகளுக்கு ஏற்படும் கஷ்ட நஷ்டங்கள் தாங்க முடியாதவை. மாதக் கணக்கில் அவர்கள் தங்கள் மனைவி மக்களோடு பட்டினி கிடக்க வேண்டும். கடைசி வரையில் சோர்வடையாது முதலாளி களுடன் உறுதியோடு போராட வேண்டும். அதே சமயத்தில் பின்னால் முதலாளிகள் தங்களைப் பழி வாங்கப் போவதையும் எதிர்பார்த்துக் கொண்டிருக்க வேண்டும். இந்த நிலையில், நாளொரு மேனியும் பொழுதொரு வண்ணமுமாகச் சாவதைவிட,