பக்கம்:வேலை நிறுத்தம் ஏன்.pdf/66

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

விந்தன் 65 என்று பெருமை யடித்துக் கொள்ளும் அதிகார வர்க்கத்தைப் போல, காங்கிரஸ் சர்க்காரும் மதுவிலக்குப் போன்ற ஏதாவது ஒரு சட்டத்தைக் கொண்டு வந்துவிட்டு, 'பார்த் தீர்களா? ஏழைகளுக்காக நாங்கள் என்னவெல்லாம் செய்கிறோம்!" என்று பெருமையடித்துக் கொள்ளுவதன் மூலம் பொதுஜனங்களை ஏமாற்றக் கூடாது! இவ்வாறு ஏமாற்றும் முறையைச் சேர்ந்ததுதான் தொழிலாளிகள் வேலை நிறுத்தம் செய்யும் போதெல்லாம் சென்னை சர்க்கார், "இதோ, மத்தியஸ்தரை நியமிக்கிறோம்!" என்பதும்! இதனால் எவ்வளவோ காலதாமதம் ஏற்படுகிறது. தொழிலாளிகள் பொறுமையை இழந்து விடுகிறார்கள். முதலாளிகள் தங்களுடைய தொழிற்சாலை, இயந்திரங்கள் முதலியவை பழுதடைந்து போகாமல் இருப்பதற்காகக் கூலிக்கு ஆள் பிடிக்கிறார்கள். இதனால் தங்களுடைய வேலை நிறுத்தத்துக்குப் பங்கம் நேர்ந்து விடுகிறதென்று அஞ்சித் தொழிலாளிகள் மறியல் செய்ய ஆரம்பிக்கிறார்கள். அமைதி குலைகிறது.