பக்கம்:வேலை நிறுத்தம் ஏன்.pdf/67

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

66 வேலை நிறுத்தம் ஏன்? முதலாளிகள் போலீசாரின் உதவியை நாடுகிறார்கள். சர்க்கார் கண்ணை மூடிக்கொண்டு அவர்களுக்கு வேண்டிய போலீஸ் உதவி அளிக்கிறது. தொழிலாளிகள் ஆத்திரமடைகின்றனர். அதன் பலன் படுகொலையில் வந்து முடிகிறது! இந்த அழகான "மத்தியஸ்தர் முறை" அதிகார வர்க்க ஆட்சியைச் சேர்ந்தது அதிகார வர்க்கத்தார், பொது ஜனங்களுடன் எந்த விதத்திலும் தொடர்பு இல்லாதவர்கள் - வரி வசூல் செய்வதைத் தவிர! காங்கிரஸ் மந்திரிகள் அப்படியில்லை. பதவிக்கு வருவதற்கு முன்னால் அவர்கள் பொதுஜனங்களுடன் நெருங்கிப் பழகியவர்கள். ஆகவே, பதவிக்கு வந்த பின்பும் அவர்கள் பொது ஜனங்களுடன் நெருங்கிப் பழக வேண்டும் இல்லை யென்றால் அவர்கள் பொது வாழ்விலிருந்தே விலகிக் கொள்ள வேண்டும்.