பக்கம்:வேலை நிறுத்தம் ஏன்.pdf/85

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

84 வேலை நிறுத்தம் ஏன்? அளவுக்கு முன்னேறிவிட்ட எதிர்கால நட்சத்திரங்கள் சில கலகலவென நகைத்தபடி உள்ளே நுழைந்தான. அவர்களுடைய சிரிப்பொலி பீதாம்பரத்தின் அலுப்பைக் கொஞ்சம் தீர்த்தது: "வீணையடி நீ எனக்கு, மேவும் விரல் நானுனக்கு' என்று தன்னை மறந்து எங்கேயோ பார்த்தபடிப் பாடக்கூட ஆரம்பித்து விட்டான் அவன்! அந்தச் சமயத்தில், 'அங்கே எந்தக் கழுதை கத்தறது?" என்று இடிக் குரல் ஒன்று உள்ளேயிருந்து வந்தது. பீதாம்பரம் சட்டென்று பாட்டை நிறுத்திவிட்டுச் சுற்றுமுற்றும் பார்த்தான். ரத்தினத்தின் அறையிலிருந்து தப்பி வந்த ஆசாமி அவனுக்கு எதிரே வந்து நின்று, "ஏன் ஒய், இதுதானே பிரேமலிலா பிக்சர்ஸ்? என்று விசாரித்தான். எப்படியிருக்கும் பீதாம்பரத்துக்கு. அப்படித்தான் சொல்கிறார்கள்!" என்றான் வெறுப்புடன், "ஒ கே! இங்கே ப்ரொடக்ஷன் மானேஜர்னு ஒரு மடையன் இருப்பானே, அவன் எங்கே இருக்கான்?" என்று கேட்டான் அவன். துாக்கி வாரிப் போட்டது போலிருந்தது பீதாம்பரத்துக்கு. ஓ.கே.யை அவன் எரித்து விடுபவன் போல் பார்த்தான்.