பக்கம்:வேலை நிறுத்தம் ஏன்.pdf/86

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

விந்தன் კჯ5 "ஒ, அந்த மடையன் நீதானா? - ஐ ஆம் வெரி ஸாரி - கவலைப்படாதே, நானும் மடையன்தான் - வா போவோம், உள்ளே!" என்று வந்தவன் இருந்தவனை அழைத்தான். பீதாம்பரத்துக்கு ஒன்றும் புரியவில்லை; அவனைப் பார்த்தது பார்த்தபடி நின்றான். "என்ன சந்தேகம், உனக்கு? கீழ்ப்பாக்கத்திலிருந்து தப்பி வந்துவிட்டேன் என்று நினைக்கிறாயா? - அதெல்லாம் ஒன்றுமில்லை; நானும் டிரைவர்தான்-வா வா!" என்று பீதாம்பரத்தைப் பலவந்தப்படுத்தி உள்ளே தள்ளிக்கொண்டு சென்றான் ஓ.கே. 'மரியாதையாகச் சொல்கிறேன் - பேசாமல் இப்படி உட்கார்!" என்றான் பீதாம்பரம். "அப்படி உட்கார்ந்தால் அவர்களுக்கும் எனக்கும் என்ன வித்தியாசம்?" என்று மற்றவர்களைச் சுட்டிக் காட்டினான் ஒ கே "உட்காரப் போகிறாயா, இல்லையா?" இல்லை!" "சரி, நட வெளியே!” "அதை நீ சொல்ல வேண்டாம்; முதலாளி வந்து சொல்லட்டும் ”