பக்கம்:வேளிர் வரலாறு.djvu/40

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

உச வேளிர் வரலாறு. கரிகாற்சோழன் மற்றெல்லாரினுஞ் சிறப்பாக, இன்னோர்க்கு எச. நாடுகளமைந்த உச - கோட்டங்களை உதவிப் பெரிதும் ஆதரித்தா னென்று தெரிகின்றது. தொல்காப்பியனார், இவ் வேளாளரில் தாழ்ந்தவர் பலரால் மிகுதியுங் கொள்ளப்பட்டுவந்த தொழிலாதல் பற்றி வேளாண் மாந்தர்க் குழு தூ ணல்ல - தில்லென மொழிப் பிறவகை நிகழ்ச்சி ” என மாபியலிற் கூறினரேனும், தங்காலத்தே இன்னோர் சிற்றரசராய்ச் சிறந்து விளங்கினமையாலும், இவரினத் தார் தமிழ் மூவேந்தர் சார்பிற் பெரிதும் மதிக்கப்பட்டு வந்தமை யாலும்- ('வேந்து வினை யியற்கை வேந்தனி னொரீஇய எனோர் மருங்கினு மெய் திட னுடைத்தே.” வில்லும் வேலுங் கழலுங் கண்ணியும் தாரு மாரமுந் தேரும் வாளும் மன்பெறு மரபி னேனோர்க்கு முரிய.” வேந்துவிடு தொழிலிற் கழலுங் கண்ணியும் வாய்ந்தன ரென்ப அவர் பெறும் பொருளே.” என்ற சூத்திரங்களால், இக்குலத்தாரையே பெரும்பான்மை கருதி, அவர்க்கு அரசர்க்குரிய வரிசை பலவும் கூறிப்போதல் காணலாம். இதனால், தொல்காப்பியனார் காலத்தே, வேளிருடைய நிலை க்ஷத்ரிய ஒழுக்கத்தினின்றும் நழுவியிருந்ததாக உய்த்துணரப்படும். இது பற்றியே, உரையாசிரியர்களும் வேளாளரது உயர்வு புலப்படும் இட மெல்லாம் அதனை அவருளுயர்ந்த உழுவித்துண்ணும் வேளாளர் மேலும், தாழ்வு புலப்படுமாயின் அவரிலிழிந்த உழுதுண்ணும் வேளா ளர் மேலும் ஏற்றிச் செல்வாராயினர். இனி, தமிழ்நாட்டிற் பண் டைக்காலத்தே விளங்கிய சிற்றரசருட் பெரும்பாலார் இவ்வேள் குலத்தவரேயாவர் ; இதுபற்றி, வேளென்றபதம், பிற்காலத்தே, வேறு குலத்தலைவரும் அடங்கக் குறு நில மன்னர் அனைவர்க்குமுரிய பெயராக வழங்கலாயிற்று. ஆனால், புண்டை வழக்கு அவ்வாறு காணப்படாமையின், அது பிற்பட்ட கொள்கை என்பதே பொருத்த

  • The Tamils 1800 - years ago; ஏரெழுபது, கஎ-ம் பாட்டு.
"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:வேளிர்_வரலாறு.djvu/40&oldid=990592" இலிருந்து மீள்விக்கப்பட்டது