இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை
எள் மற்றை வேளிர். விளங்கியவர், வேளார் என்னும் பெயருடன் சோழர் முதலிய அரச ராலும் பலவாறு கெளரவிக்கப்பட்டு வந்த செய்தி சாஸனங்களால்* அறியப்படுகின்றது. இவர்க்குப் பிற்காலத்தும், இக்குலத்தலைவரிற் கொடைக்கடம் பூண்டிருந்த பெருவள்ளல்கள் பலராவர். இவற்றை யெல்லாம் ஈண்டு விரிப்பிற் பெருகும்; ஆதலின், பின்புள்ளோர் இயற் றிய நூல்கள்நோக்கி அறிந்துகொள்ளற்பாலன. ' எப்பொருள் யார்யார்வாய்க் கேட்பினு மப்பொருண் மெய்ப்பொருள் காண்ப தறிவு" - திருவள்ளுவர். வேளிர் வரலாறு முற் று ம் .
- South Indian Inscriptions, Vol. III, p. 113).