பக்கம்:வைணமும் தமிழும்.pdf/160

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.



7. வைணவ ஆசாரியர்கள்

வைணவ சித்தாந்தத்தில் ஆழ்வார்கள், ஆசாரியர்கள் இவர்களின் வரலாறுகளே சிறந்த வழிகாட்டிகள். அவை சேதநனுக்கு ஞானத்தையும் காட்டக்கூடியவை. அவர்கள் பரம்பரையை நாளும் சிந்திப்பார் இராமாநுசரின் திருவருளுக்கு என்றும் இலக்காகி சதிராக வாழ்ந்திடுவர். ஆழ்வார்கள் வரலாறு இந்நூலில் தனி இயலில் காணலாம். ஈண்டு ஆசாரியர்களின் வரலாற்றைக் காண்போம்.

1. பெரியபெருமாள் : (ஶ்ரீமந்நாராயணன் முதல் ஆசாரியர்) சீடர்கள் : பெரிய பிராட்டியார், பூமிப் பிராட்டியார், நீளாதேவி. திருநட்சத்திரம் - திருவோணம்.

2. பெரிய பிராட்டியார் : சீடர்கள்: திருவனந்தாழ்வான், (ஆதிசேடன்),பெரியதிருவடி, விஷ்வக்சேநர் (சேனை முதலியர்) ஆகிய நித்திய சூரிகள். திருநட்சத்திரம் - பங்குனி உத்தரம்.

3. விஷ்வக்சேநர் : சீடர்கள் : ஆழ்வார்கள், திருநட்சத்திரம் - ஐப்பசி பூராடம்.

மதுரகவியாழ்வாரின் சீடர் பராங்குசதாசர். இவர் தந்த் குறிப்பினால்தான் நாதமுனிகள் 'கண்ணிநுண் சிறுதாம்பை'ப் பன்னிராயிரம் உரு நியமத்தோடு அநுசந்தித்து அர்ச்சை நிலையைக் கடந்து வந்த நம்மாழ்வார் மூலம் நாலாயிரமும் பெற்றனர் என்பது வரலாறு.[1]


  1. இவ்வரலாற்றைப்போலவே சைவ சமயத்தில் நம்பியாண்டார் நம்பி திருநாரையூர் பொல்லாப் பிள்ளையார் மூலம் திருமுறைகளைப் பெற்றதாக வரலாறு.