பக்கம்:வைணமும் தமிழும்.pdf/225

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

208

வைணவமும் தமிழும்


இரண்டாம் வகை: நார+அயநம்+யஸ்ய என்பது, பஹு விரீஹி ஸமாசம். இஃது அன்மொழித்தொகை எனப்படும். இதனால் நாரங்களை அயநமாக உடையவன் என்ற பொருள் கிடைக்கும். அயந’ பதம் பிரவேசிக்கப்படும் பொருள் என்ற பொருளைத் தரும். ஆகவே சர்வேசுவரன் சேதநா சேதங்களைப் பிரவேசிக்கப்படும் பொருளாகக் கொண்டவன் என்று அன்மொழித் தொகையால் ஏற்பட்டது.

மேலும், ‘அயந’ என்ற பதம் வசிக்குமிடம் எனவும் பொருள்படும். எனவே, முற்கூறியபடி முதல் வகை இலக்கணப் புணர்ச்சியால் சேதந - அசேதநங்களுக்கு இருப்பிடமானவன் என்றும், இரண்டாவது வகை இலக்கணப்படி அவற்றைத் தனக்கு இருப்பிடமாகக் கொண்டவன் என்றும் பெரியோர் பொருள் கூறுவதுண்டு. இவ்வாறாயின் முதற்பொருளில் சேதந அசேதநங்கள் இல்லாதவிடத்திலும் எங்கும் சர்வேசுவரன் உளன் என்று தேறும். இது ‘பஹிர்வியாப்தி’ எனப்படும்.இரண்டாவது பொருளில் சேதநஅசேததங்கள் உள்ளவிடத்தில் தான் இல்லை என்னவொண்ணாதபடி சர்வேசுவரன் கலந்து நிற்பவன் என்று தேறும். இஃது அந்தர்வியாப்தி எனப்படும்.

திருமந்திரத்தின் மூன்று பதங்களில் ‘ஓம்’ என்பதில் ஒர் எழுத்தும் ‘நம’ என்பதில் இரண்டு எழுத்தும், ‘நாராயணாய’ என்பதில் ஐந்து எழுத்துகளும் உள்ளன. இவற்றின் கூட்டுத் தொகை 1+2+3=8 என்றவாறு எட்டு எழுத்துகளாக அமைகின்றது. இதனால் இதனைத் தமிழில் எட்டெழுத்து மந்திரம்’ - என்றும், வடமொழியில் ‘அஷ்டாட்சர மந்திரம்’ என்றும் வழங்குகின்றது. (அஷ்டம்-எட்டு அட்சரம் எழுத்து.