பக்கம்:வைணமும் தமிழும்.pdf/239

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

222

வைணவமும் தமிழும்


இதன் கருத்தைத் தெளிவாக்குவோம். முதலில் உலகியலில் ஒரு நிகழ்ச்சியை நோக்குவோம். ஒருவன் கடன் பட்டிருக்கின்றான்; அக் கடனைத் திரும்பப் பெறுவதற்காகக் கடன் கொடுத்தவன் வீட்டிலே வந்து கேட்கின்றான். அப்படி வருகின்றவன் முதலில் சில நாட்கள் நின்ற வண்ணம் பணம் கேட்டுவிட்டுப் போகின்றான். பலன் இல்லை. அடுத்து வருகின்ற சில நாட்களில் வாங்கினவன் திண்ணை மீது உட்கார்ந்து கடனைத் திரும்பத் தருமாறு நிர்ப்பந்தித்துப் போவான். இவ்வளவிலும் அவன் மிசையாவிடில் கடனைத் தீர்க்காவிடில் நான் போவதில்லை’ என்று படுக்கையாகத் திண்ணையில் படுத்து நிர்ப்பந்திப்பான்.

இப்படியாக எம்பெருமானும் நம்போன்ற ஆன்ம கோடிகள் செலுத்தவேண்டிய கைங்கரியக்[1]கடனைப் பெற்றுக் கொள்வதற்காக ஒரிடத்தில் (ஊரகத்தில்)[2] நின்று பார்க்கின்றான். மற்றோரிடத்தில் (பாடகத்தில்)[3] வீற்றிருந்து பார்க்கின்றான். இன்னும் ஓரிடத்தில் (திருவெஃகாவில்)[4] சாய்ந்து பார்க்கின்றான். “இப்படிச் செய்ததெல்லாம் நான் எதிர்நோக்கி இல்லாத காலத்தில் நித்தியவிபூதி லீலாவிபூதிகட்கு நாதனான எம்பெருமான் சம்சாரியான எனக்கு ருசி பிறவாத காலமெல்லாம் ருசி பிறப்பிப்பதற்காக நின்றான், இருந்தான். கிடந்தான். என்னிடம் ருசி உண்டாக்குதல் அவனுக்குச் சாத்தியம் (பலன்); அதற்குச் சாதனம் (வழி


  1. கிங்கரன்-வேலையாள், கைங்கரியம்-அவன் செய்யும் தொழில்; அஃதாவது அடிமைத் தொழில்.
  2. காஞ்சி உலகளந்த பெருமாள் சந்நிதியில் உள்ளது.
  3. காஞ்சி பாண்டவ தூதர் சந்நிதியில் உள்ளது.
  4. காஞ்சி சொன்ன வண்ணம் செய்த பெருமாள் சந்நிதியில்