26
வைணவமும் தமிழும்
- காலாடு போழ்தில் கழிகிளைஞர் வானத்து
- மேலாடு மீனிற் பலராவர்-ஏழா
- இடர்ஒருவர் உற்றக்கால் ஈர்ங்குன்ற நாட!
- தொடர்புடையோம் என்றார் சிலர் (113)
செல்வமுள்ள காலத்துப் பலர் உம்மை சூழ்ந்து பொய்யளவு பாராட்டிநடித்தலும் வறுமை வந்த காலத்தில் சிலர் மாத்திரமே மெய்யுணர்வினராக வந்து உதவுதலுமாகிய உலக இயற்கை இதனாற் சொல்லப்பட்டது. இக்கருத்தையொட்டிய திருவாய்மொழிப் பாசுரம் இது.
பொருள் கை உண்டாய்ச் செல்லக் காணில்
போற்றி என்று ஏற்று எழுவர்
இருள்கொள் துன்பத்து இன்மை காணில்
என்னே! என் பாரும் இல்லை. (9.1:3)
"பைத்தியக்காரனைச் சுற்றிப் பத்துப்பேர் பணக்காரனைச் சுற்றிப் பத்துப்பேர்” என்ற பழமொழிக்கிணங்க சொந்த நலனிலே கண்ணாயிருப்பவர்கள் பயன் உள்ளபோது நட்பை அபிநயிருப்பார்களேயன்றி அதற்கு வழி இல்லையென்றால் அணுகவும் மாட்டார்கள். ‘இன்மை காணில் என்னே என்பாரும் இல்லை; கையிலுள்ளதெல்லாம் போய் வறுமையுண்டான வாறே 'ஐயோ' பாவம்’ என்று மனம் நோகும் சொல்கூட வாயில் வரமாட்டாது.' இவ்விடத்தில் பிள்ளை நறையூர் அரையர் பணிப்பாராம்; “இரப்பவர்கட்கு இட்டே வறுமையை அடைந்தான் தனிகன்.” அவனுடைய எல்லாச் சொத்துகளையும் கொண்டு செல்வம் பெற்றவர்கள் உண்டே அவர்கள் இந்த வறிஞனை ‘ஏனப்பா நலமா' என்று வினவினால் அப்படி வினவின மாத்திரத்தில் அவன் ஒரு