இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.
வைணவமும் தமிழும்
31
என்பது திருவரங்கத்தில் திருமால் அறிதுயில் கொண்டு கிடந்த வண்ணத்தை நுவல்வது. இதில் உயர்ந்த பொன்மலையின்மீது நீலமுகில் படிந்ததுபோல் ஆயிரம் தலைகளையுடைய ஆதிசேடனாகிய பாயலின் மீது காவிரியின் ஆற்றிடைக் குறையாகிய திருவரங்கம் என்ற திவ்விய தேசத்தில் திருமகள் அமரும் மார்பனாகிய திருமால் பள்ளி கொண்டருளும் செய்தி கூறப் பெற்றுள்ளது.
அடுத்து, மாங்காட்டு மறையோன் திருவேங்கடத்தில் திருமாலின் நின்ற திருக்கோலத்தைக் கூறுகின்றான்.
- வீங்குநீர் அருவி வேங்கடம் என்னும்
- ஒங்குயர் மலயத்து உச்சி மீமிசை
- விரிகதிர் ஞாயிறுந் திங்களும் விளங்கி
- இருமருங் கோங்கிய விடைநிலை தானத்து
- மின்னுக்கோடி எடுத்து விளங்குவிற் பூண்டு
- நன்னிற மேகம் நின்றது போலப்
- பகையணங் காழியும் பால்வெண்சங்கமும்
- தலைபெறு தாமரைக் கையில் ஏந்தி
- நலங்கினர் ஆரம் மார்பில் பூண்டு
- பொலம்பூ ஆடையில் பொலிந்து தோன்றிய
- செங்கண் நெடியோன் நின்ற வண்ணமும்[1]
இது ‘அகலகில்லேன் இறையும்' என்று 'அலர்மேல் மங்கை உறை மார்பனாகிய' வேங்கடவாணனின் நின்ற திருக்கோலத்தைக் காட்டுவது.இதில் ஒலிக்கின்ற அருவிகள் மலிந்த திருவேங்கடம் என்னும் திருமலையில் ஞாயிறும் திங்களும் இருமருங்கும்
- ↑ மேலது- அடி (41-51)