திருவாய்மொழி 491 229 வாழ்தல் கண்டீர் குணமி தந்தோ! மாயவன் அடி பரவி போழ்து போக உள்ள கிற்கும் புன்மை இலாதவர்க்கு வாழ்து ணையா வடம துரைப்பி றந்தவன் வண்புகழே வீழ்து ணையாய்ப் போமிதனில் யாதும் இல்லை மிக்கதே " 1 மாயவன்-சர்வேசுவரன்; அடி-திருவடி; பரவி. துதித்து; போழ்து போக-காலம் கழிக்க; உள்ளகிற்கும்-நினைக்க வல்லவர்களான; புன்மை இவாதவர்க்கு-உத்தமர்கட்கு; வாழ் துணை ஆ.வாழ்வதற்குத் துணையாக;. வண் புகழ் - திருக்குணங்கள்; வீழ்துணையா - ஆசைப்படும் துணையாக; இதனில்.இந்த வாழ்வைக் காட்டிலும்; மிக்கது.மேம்பட்டது) எல்லாவகையிலும் உறவினனான திருமாலைச் சேர் மின் என்று பேசும் திருவாய்மொழியில் இஃது ஒருபாசுரம். இதில் ஆழ்வார், (எம்பெருமானுடைய கல்யாண குணங் களையே கூறிக்கொண்டு) வாழ்தலாகிய இஃது அன்றோ குணமாவது; ஐயோ! மாயவனாகிய இறைவனுடைய திருவடிகளைத் துதித்துக் காலத்தைக் கழிக்க நினைக்கக் கூடியவர்களான பெரியோர்களுடைய வாழ்ச்சிக்குத் துணையாவதற்காக வடமதுரையிலே வந்து திருவவதரித்த வனுடைய வளவிய புகழையே ஆசைப்படும் துணையாகக் கொண்டு வாழ்வதே மேலான வாழ்வாம்; இவ்வாழ்வினைக் காட்டிலும் மேம்பட்ட வாழ்வுயாது ஒன்றும் இல்லை' என்கின்றார். 3. திருவாய். 9, 1. 9
பக்கம்:வைணவ உரைவளம்.pdf/514
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை