இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை
542 வைணவ உரைவளம் அருளிப்பாடுகள் சொல்லுகின்ற மாதிரியே சொல்லிக் கொண்டு வரும்போது ஜீயரே! என்று அருளிப்பாடு சொல்லிக் கூவினான். இராமாநுசரும், நாயிந்தே!’ என்று கோயிலில் சொல்லுவதுபோல் சொல்லிக் கொண்டே கையை நீட்டித் தம் மேலாடையில் அந்த மண்ணைப் பிரசாதமாக ஏற்று கொண்டார். சிறுவர் களுக்கு ஒரே குதூகலம்: இராமாநுசருக்கோ பொய்கை யாழ்வாரின் இதயத்தையே பார்த்துவிட்டது போன்ற பரவசம்.