இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.
வை.பு.இ.புராண பாகவதம்
தேசுறு நிகரில் சீதரன்
- இருடிகேசன் ஒண்பதும நாபன்சீர்
வீசிய தாமோதரன் என உரையின்
- வினையற உயர்பதத் துறலாம்
என்பது.
ஒரு பாடலில் பன்னிரு மாதப் பெயர்களும் அமையப் பாடியுள்ளார்.
வாமமவிர் சித்திரைவை காசியானி கலையாற்றி
- வெண்ணைக்காடி யாவனிக்கு ணின்று கஞ்சத்
தீமையன் மண்விழப் புரட்டாசியற் பசிசு
- பாலன் சிரந்துணியவே ஆழியைவிடு நற்றேவன்
சோமகுல அந்தகன்சேய் முனர்நடுங்காத திகைத்தாள்
- தூசிடைமாளா தருளுந் துளபமார் கழியான்
பூமன்வனிதைக் காய்மாசில் சாபங்குனியப் போரினில்
- தெசமுகனைச் செற்றூனைப் போற்றி செய்வாம்.
என்பதில் இதனைக் காணலாம். பல இடங்களில் தசாவதாரங்கள் குறித்துப் பாடப் பெற்றுள்ளது.
ஊரிலி யுருவம் இலிகுண மிலிபே
ரிலியிழை கருமமொன் றிலியால்
ஆருனை யறிவார் அறிந்தவர் பிறவி
அளக்கரின் வீழ்ந்திடா வண்ணம்
சீருறு மீன்கூ ரும்கிரி மான்குறள்
மழுச்சி லையலா யுதராய்
நேரில்யா தவனா யிவணினிற் றோன்றி
நிகரிலாக் கற்கியு மாவாய்.
என்பதில் தசாவதாரங்களும் நுவலப் பெற்றிருப்பதைக் கண்டு மகிழலாம்.
ஒரு துதிப்பாடலில் முத்தி நகர் ஏழும் குறிப்பிடப்பெற்றுள்ளன.