பக்கம்:வைணவ புராணங்கள்.pdf/67

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

சுராவின் வைணவ புராணங்கள்




'விசயநீ யானே உன்றன்
வில்வியான் விசிகம் யானே
கசியுறு சதமும் யானே
துணியுமொன் னலரென் சேட்டை
வசையுனக் கெங்ங்ன் எய்தும்
வருந்தல் நீ என்று மாயன்
இசையுற விளம்பத் தன்பேர்
உருவம்வான் இலங்க நின்றான்

என்பது அவற்றுள் ஒரு பாடல்

நாராயண கவசம் என்று இவர் குறிப்பிடுகின்றார் (110:166). ஆனால் கவசத்தைச் சொல்லவில்லை. கவசம் செவ்வைச் சூடுவார் பாகவதத்தில் உள்ளது.

சிசுபாலன் கண்ணனைப் பழித்தபோது, விடுமன் அவனைத் தடுத்துக் கண்ணனைப் புகழ்கின்றான் (13 பாடல்கள் 106: 49-62).

இவனே உலகேழையும் ஈன்ற ருள்வோன்,
இவனே அயனைத் தரும் றில்பிரான்,
இவனே அரன்வெவ் விடரைக் களைவோன்
இவனே உயரும் பதம்சபவனே."

என்பது காண்க. கண்ணன் அருள் பெற்றோருள் இருவர் குறிப்பிடத்தக்கவர்- ஒருவன் மலர் கொண்டு அணிந்தவன், ஒருவன் சாந்தம் கொண்டு அணிந்தவன் (படலம் 50, 5)

இவர்தம் பாடல்கள் எளிமையாய் இருப்பினும் கவிதைப்பண்பில் சிறந்தவையல்ல; சுவையற்றிருப்பதும் உண்டு. பின்வரும் பாடல்கள் காண்க. திருக்கல்யாணத்துக்காக உருக்குமிணியை அலங்கரிக்கும் சமயம் சேடியர்கள் வாக்காக வருவன:



நித்திலம் பெண்நிறை மலர்க் காந்தளாம்
கைத்தலப் பெண் அருந்ததிக் கற்புப்பெண்
வித்தகப் பெண் விதர்ப்பனருட் பெண்நல்
உத்தமப் பெண் உருக்குமிணிப் பெண்ணே

48