பக்கம்:வ. உ. .சி. முற்போக்கு இயக்கங்களின் முன்னோடி.pdf/41

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

நா. வானமாமலை

39


    ஏழை யென்றும் அடிமை யென்றும்
         எவனும் இல்லை சாதியில்
    இழிவு கொண்ட மனித ரென்பது
         இந்தி யாவில் இல்லையே
    வாழி கல்வி செல்வ மெய்தி
         மனமகிழ்ந்து கூடியே
    மனிதர் யாரும் ஒருநி கர்ச
         மான மாக வாழ்வமே

    மாதர் தம்மை இழிவு செய்யும்
         மடமை யைத்கொளுத்துவோம்
    வைய வாழ்வு தன்னில் எந்த
         வகையி லும்ந மக்குளே
    தாதர் என்ற நிலைமை மாறி
         ஆண்களோடு பெண்களும்
    சரிநி கர்சமான மாக
         வாழ்வ மிந்த நாட்டிலே

விடுதலையின் உணர்வுகளைக் கற்பனையாக இப்பாடல் உணர்த்துகிறது. வெறும் கற்பனையைச் சொல்லாத இப்பாடல் விடுதலை யாருக்கெல்லாம் தேவை என்பதைச் சுட்டிக் காட்டுகிறது. பொதுவான சமத்துவம் நிறைந்த ஒரு பொருளாதார அமைப்புத் தேவை என்பதும் சுட்டிக்காட்டப்படுகிறது. சோசலிச அமைப்பு என்ற இந்திய அரசியல் அமைப்பைச் சொல்லால் அழைக்கவே, நமது கோடீசுவரர்களின் பத்திரிகைகள் எவ்வளவு எதிர்ப்பைக் கக்குகின்றன. 1921 செப்டம்பரில் எழுதிய பாட்டு, இத்தகைய கருத்துக்களைக் கொண்டிருப்பதே மிக முற்போக்கான ஒரு போக்காகும்.

பாரத சமுதாயம்
பல்லவி

 
      பாரத சமுதாயம் வாழ்கவே–வாழ்க வாழ்க!
      பாரத சமுதாயம் வாழ்கவே–ஜய ஜய ஜய! (பாரத)

அனுபல்லவி

     முப்பது கோடி ஜனங்களின் சங்கம்
         முழுமைக் கும்பொது வுடைமை
     ஒப்பி லாத சமுதாயம்
         உலகத் துக்குஒரு புதுமை–வாழ்க! (பாரத)