பக்கம்:வ. வே. சு. ஐயர்.pdf/80

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

78

வ.வே.சு.


 எனது கருத்து தங்களிடம் தோற்றது. இனி நான் அறப்போராட்ட அகிம்சை வழியைத்தான் பின்பற்றுவேன்’ என்று தெரிவித்து வணங்கினார்.

வ.வே.சு.ஐயரின் இந்த மனமாற்றப் போக்கைக்கண்டு மகாத்மா மிகவும் மகிழ்ந்தார். முதல் உலகப்போர் முடிந்தது! காந்தி அடிகளார் விடுத்த ஒரு வேண்டுகோளுக்கு ஏற்றவாறு வ.வே.சு. ஐயர் மீது பிரிட்டிஷ் அரசு தொடுத்திருந்த எல்லா வழக்குகளையும் திரும்பப் பெற்றுக்கொண்டது. உடனே, புதுவையிலே இருந்த வ.வே.சு.ஐயர் தமிழ் மண்ணிலே தான் பிறந்த பூமியிலே காலடி வைத்தார்.

பல்லாண்டுகளுக்குப் பிறகு, தனது மனமாற்ற அரசியல் கொள்கையால், அவர் மனம் அளவிலா மகிழ்ச்சி பெற்றாலும், அந்த சுதந்திரப் போர் வீரத் திலகத்தின் பிறப்பும், வளர்ப்பும், தியாகமும், ஆன்மிக ஞானமும், தேசபக்தி உணர்வும் நம்மை எவ்வாறு மேம்படுத்துகின்றன என்பதைச் சிந்திப்போமாக!

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:வ._வே._சு._ஐயர்.pdf/80&oldid=1083992" இலிருந்து மீள்விக்கப்பட்டது