பக்கம்:வ. வே. சு. ஐயர்.pdf/89

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

என்.வி. கலைமணி

87


அவருக்குப் பெல்லாரி கடுங்காவல் தண்டனை கூடப் பெரியதாகத் தெரியவில்லை. தேச விடுதலைதான் அவர் கண்ணெதிரே வந்து நின்றது. அதனால், சிறையின் சித்ரவதைகளை எல்லாம் அவர் தனது கால் தூசாகக் கருதிப் பணியாற்றி வந்தார்.

ஒன்பது மாதம் கடுங்காவலை அனுபவித்து விட்டு விடுதலை பெற்று வெளியே வந்த வ.வே.சு. ஐயர், ‘தேசபக்தன்’ பத்திரிக்கை மூடப்பட்டுக் கிடந்ததைக் கண்டு கவலையடைந்தார். அதனால், அவரது குடும்ப வருமானம் சீர்குலைந்து நின்றது.

தனது வறுமையைப் பற்றி ஐயர் வருந்தினாரில்லை. ஆனால், வெள்ளைக் கொடுங்கோலனிடம் பாரத நாடு சிக்கிப் பரிதவித்துக் கொண்டிருக்கின்றதே! என்று கிடைக்குமோ எங்கள் சுதந்திரம் என்று அவர் கவலைப்பட்டார். சுதந்திரம் கிடைக்கும் காலம் எப்போது வருமோ என்று ஏங்கினார்.

சேரன் மாதேவி ஆசிரமப் பிரச்னை, சமபந்தி விரோதம், பெல்லாரி சிறைவாசம், தேசபக்தன் பத்திரிக்கை மூடிவிட்டதால் ஏற்பட்ட வருமான இழப்பு, வறுமையின் கோரம் போன்ற எதிர்பாராத வாழ்க்கைச் சிக்கல்கள் அவரைத் தினந்தோறும் அனலிடைப் புழுவாய் துடிக்க வைத்தன. என்றாலும் அவைகளுக்காக அவர் பயப்படவில்லை. ஏனென்னறால் எதிர்நீச்சல் போட்டே வாழ்ந்தவர் அல்லவா அவர்?

அந்த நேரத்திலே, 3.7.1925-ஆம் நாளன்று, வரகனேரி வேங்கடேச சுப்பிரமணியம் ஐயர் எனப்படும் வ.வே.சு.ஐயர், தனது மகள் சுபத்திரையை அழைத்துக் கொண்டு குற்றாலம் சென்றிருந்தார். அப்போது அவருடைய மகள், குற்றாலத்திலே உள்ள ‘கல்யாண் நீரருவி’யில் நடந்து செல்ல ஆசைப்பட்டார். ஆசைப்பட்டது மட்டுமன்று தந்தையையும் வற்புறுத்தினார்!

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:வ._வே._சு._ஐயர்.pdf/89&oldid=1084007" இலிருந்து மீள்விக்கப்பட்டது