பக்கம்:வ. வே. சு. ஐயர்.pdf/90

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

88

வ.வே.சு.ஐயர்


மகளது அவாவை நிறைவேற்ற எண்ணிய வ.வே.சு.ஐயர், பின்னே நடந்து வர, முன்னே நடந்து போகும் போது, காலிடறி நதியில் சுபத்திரை விழுந்துவிட்டார். இதையறிந்து திடுக்கிட்டு, திகைத்து மகளைக் காப்பாற்றுவதற்காக வ.வே.சு. ஐயர் அருவியில் குதித்தார். பாவம், தந்தையும் மகளும் இருவரும் நீரருவியின் வேகத்தில் மூழ்கி இறந்தே போனார்கள்.

இந்திய நாட்டின் சுதந்திரத்திற்காக அல்லும் பகலும் உழைத்து உழைத்து உருக்குலைந்து போன வ.வே.சு.ஐயர். தனது 44-ஆம் வயதில் இறந்து போன செய்தி நாடெங்கும் பரவியது. இதை அறிந்த தேசத்தலைவர்கள் அனைவரும் வருத்தப்பட்டுத் துயரத்தில் மூழ்கினார்கள்.


□ □ □
"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:வ._வே._சு._ஐயர்.pdf/90&oldid=1084008" இலிருந்து மீள்விக்கப்பட்டது