பக்கம்:ஷம்சுத்தாசீன் கோவை (கவிதைகள்).pdf/113

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

லத்தமு மன்புமொன் றாய்வர நீகொள் ளருவிடமும் புத்தமு தாயின் புசிக்கல ருண்டுகொல் பூந்திருவே. (145) இவற்றுள் பாங்கி கூற்றாயினவெல்லாம் கூட்டற்கும் பாங்கிற் கூட்டற்கும் தலைவன்கூற்றாயினவெல்லாங்கூட்டற்கும், வேட்டற்கு முரியன. இத்துணையும் ஆறாநாள் நிகழ்ச்சி யென்க. பாங்கியிற் கூட்டம் முற்றிற்று. ஒருசார் பகற்குறி. அஃதாவது ஒரு கூற்றுப் பகற்குறி, அது யாதெனில்? தலைவன் மறுநாள் தன்வேட்கை மிகுதியால் பகற்குறியிடத்துவந்து நிற்கத் தலைவியைப் பாங்கி குறியிடத்துச் செலுத்தாது மறுத்துக்கூறத் தலைவன் வருந்திப் போதல். ஆதலாற் பகற்குறியாகாது ஒருசார் பகற்குறியாயிற்று; அஃது இரங்கல் வன்புறை இற்செறிப் புணர்த்தலென மூவகைப்படும்; அவை வருமாறு: கிழவோன் பிரிந்துழிக்கிழத்தி மாலையம் போது கண்டிரங்கல். (இ-ள்.) மேற்கூறியவாறு தலைவன் பிரிந்துபோகத்தலைவிமாலைக்காலத்தைக் கண்டு வருந்துதல்; இக்கூற்றுப் பாங்கியை நோக்கிக் கூறுதலும் மாலையை நோக்கிக் கூறுதலுந் தன்னுட் கூறுதலுமென மூன்றாம்; அவற்றுளிது தன்னுட் கூறுதல். துறந்தார்ப் பிழைத்தார்ச் சுடுகினம் போலுமென் றோகைநல்லாய் பிறந்தா ரிருள்செறி மாலையம் போழ்து பெரிதுறுத்தி மறந்தார்ச் சிறைசெயு மால்ஷம்சுத் தாசீன் மணிவரைவாய்க் கறந்தா ருயிருணு மென்செய்வ லெல்லைக் கடல்கவிழ்த்த்ே. (146) பாங்கி புலம்பல். (இ-ள்.) தலைவி வருத்தங்கண்டு பாங்கி வருந்துதல். மீறும் பெருந்தள வேள்வடிம்சுத் தாசீன் வியன்கிரிவாய்க் கூறுங் குணநலத் தோர்செல மாமதன் கூர்ந்துவந்தங் கேறும் பரியு மிரதமுங் காளமு மீர்ங்குடையுஞ் சிறும் படிகரிக் கிங்கென்கொ லோவிவள் செய்ததுவே. (/47) ಖಖಖನಗಿ- தலைவி வருந்தல். (இ-ள்.) தலைவன் வாராது நாழிகை நீடிக்கத் தலைவி வருந்திக் கூறுதல், 109