பக்கம்:ஷம்சுத்தாசீன் கோவை (கவிதைகள்).pdf/121

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வடலோ டமாறுப் போன்ஷம்சுத் தாசீனருட்கிரிவாய் மடலோ டொளிரு மலர்முகத் தீரென் வழுத்துவதே. (/75) நேர்ந்தமை பாங்கி நெடுந்தகைக் குணர்த்தல். (இ-ள்.) தலைவி யுடன்பட்டமையைத்தலைவனுக்குத் தோழி கூறுதல். போற்றியுந் தாழ்ந்தும் புகழ்ந்தும் பலபல புத்துரைகள் காற்றியு மன்னவ னெஞ்சங் கனியத் தரணிமுற்றுத் தீற்றிய வெண்புகழ்ச் சேய்ஷம்சுத் தாசீன் செழுஞ்சிலம்பிற் றேற்றிய வாறர சேயென்னென் கோவுளந் தேர்ந்துனக்கே. (/76) குறியிடைநிறீஇத் தாய்துயி லறிதல். (இ-ள்.) பாங்கி தலைவனைக் குறியிடத்து நிறுத்தித் தாயினது நித்திரையை யறிதல். மணந்தந்த சந்தனம் புன்னைய சோகநன் மாதவிவங் கணந்தந்த மல்லிகை முல்லையெ லாமொரு கைக்களிறுற் றெணந்தந்த மெய்த்தவ வேள்வும்சுத் தாசீ னருந்தடத்தம் பணந்தந்த வல்குலம் பாவாய் நிரையறப் பாய்கின்றதே. (/77) இறைவிக் கிறைவன் வரவறிவுறுத்தல். (இ-ள்.) தலைவிக்குத் தோழி தலைவன் குறியிடத்து வருதலையறிவித்தல். பூவார் மலருந் தழையுந் கொடுமுனம் போந்தவரின் றேவார் விழியனங் கேசுக நாடியெ மாந்தறிஞர் நாவார் நறும்புகழ் மால்ஷம்சுத் தாசி னளினவெற்பிற் கோவா ரணியொளி யேவழி யாமனை கொண்டனரே. (/78) தலைமகளைக் குறியிடத்துக் கொண்டு சேறல். (இ-ஸ்.) தலைமகன் வந்து நிற்குங் குறியிடத்துக்குத் தலைவியைப் பாங்கி யழைத்துக் கொண்டு செல்லுதல். நஞ்சே யுமிழ்படை நல்விளக் காயெழு நள்ளிருள்வாய்த் தஞ்சேவை காணத் தனித்திருந் தாரவர் தண்ணவர்கா வஞ்சே யருட்கரத் தான்ஷம்சுத் தாசி னடுக்கலினந் நெஞ்சே வழிதரப் போதுகம் வாவங்கெ னேரின்ழயே. //79) 1 17