பக்கம்:ஷம்சுத்தாசீன் கோவை (கவிதைகள்).pdf/123

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

- புகழ்தல் (இ-ஸ்.) வெளி எமையா தரிக்குமிக் கோன்ஷம்சுத் தாசீ னருஞ்சிலம்புஞ் சமையாத பொம்மற் றகுதனத் திருந்தஞ் சாயலெல்லா மிமையாது நோக்கி யிகநிலை யின்றி யிருப்புமிங்ங் னமையாது விண்போந் தலைந்தனர் காணல் வரம்பையரே. (/85) இறைமகளிறைவனைக் குறிவால் விலக்கல். (இ-ள்.) யானையைச் சிங்கமோது மிராக்காலத்திலே வரிற்றுன்பமிகவுண்டா மென்று பயந்து தலைவிதலைவன் வருதலை விலக்கல். ஒருகைக் களிறு மராவு மரியு முறுத்தெழுந்து பொருகைக் குரியவிப் பொங்கிருட் சாரலிற் போந்தெவர்க்குந் தருகைக் குயர்ந்ததக் கோன்ஷம்சுத் தாசீன் றமிழ்ச்சிலம்பில் வருகைக் கெளிதல வந்தால் வருந்துயர் மன்னவனே. (/86) இறைவியை யில்வயின் விடுத்தல். (இ-ள்.) தலைவன்தலைவியை வீட்டினிடத்துச்செல்லென விடுத்தல். கோணாது காக்குநற் கோன்ஷம்சுத் தாசீன் கொழுங்கிரிவாய்ப் பூனாது நூபுரச் சிற்றொலி வாணகைப் போதனைத்தும் போனாது செஞ்சிவப் பேற்றா தடியுனைப் பெற்றவன்னை காணாது போந்தருள் கன்னிநல் லாயுன் கடிமனைக்கே. (/87) இறைவியை யெய்திப் பாங்கி கையுறை காட்டல். (இ-ள்.) குறியிடத்து நீங்கிய பாங்கி தலைவியை யடைந்து கையுறை காட்டுதல். தண்ணார் நறவத் தளவமெல் லாமுன் றணிநகைகண் டண்ணாந் துடைந்து மலர்வாய் விடுத்து மனுதினமு மண்ணாள் பெரும்புய மால்ஷம்சுத் தாசின் மலையவெற்பி லெண்ணா தெடுத்துவந் தேனணி வாயென்ற னேந்திழையே. (/88) இற்கொண்டேகல். (இ-ஸ். தலைவியைப் பாங்கி வீட்டிற்குக் கூட்டிக் கொண்டு செல்லுதல், ஒல்காப் புகழ்ப்பெரு மான்ஷம்சுத் தாசி னுயர்சிலம்பிற் பல்கா ரமுதனை யாய்துயி னித்தனை பார்க்கினம்மை யில்கா ரனநினைந் தென்னினை யாள்சரி யின்றிளிநீ செல்கா லெனநட வாவடை வாமந் திருமனைக்கே. //89) 3 : 3