பக்கம்:ஷம்சுத்தாசீன் கோவை (கவிதைகள்).pdf/125

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

விலக்கலுமாகிய மூன்றும் மறுத்தற்கும், பாங்கி யவனாட் டணியியல் வினாதலும் அவற்குத் தன்னாட் டணியியல் பாங்கி காற்றலும் நேரிழை பாங்கியோடு நேர்ந்துரைத்தலுமாகிய மூன்றும் உடன்படற்கும், தலைமகள் நேர்ந்தமை ப ங் கி தலைவற்குணர்த்தலும் குறியிடை நிறீஇத்தாய் துயிலறிதலும்இறைவிக்கு இறைவன் வரவறிவுறுத்தலும் அவட்கொண்டு சேறலுமாகிய நான்குங் கூட்டற்கும், தலைமகன் தலைமகளை யெதிர்ப்படுதலும் தேற்றலும் புணர்தலுமாகிய மூன்றும் கூடற்கும், தலைமகன் புகழ்தலும் கையுறைகாட்டலுமாகிய இரண்டும் பாராட்டற்கும், தலைமகன் தலைவியை யில்வயின் விடுத்தலும் பாங்கி தலைமகளைஇற்கொண்டேகலுமாகிய இரண்டும்பாங்கிற் கூட்டற்கும், நேராதிறைவி நெஞ்சோடு கிளத்தலும் தலைமகள் ஆற்றினதருமை நினைத்திரங்கலும் பெருமகன் மயங்கலும் தோழிதலைமகள்துயர் கிளந்து விடுதலுமாகிய நான்கும் முயங்கற்கும், பாங்கி குறியுய்த்தகறலும் திருமகட் புணர்ந்தவன் சேறலுமாகிய இரண்டும் நீங்கற்கு முரியன. முயங்கல் வருந்துதல். இதுவரையும் எட்டாநாள் நிகழ்ச்சி. இரவுக்குறி-முற்றிற்று. இரவுக்குறி யிடையீடு. அஃதாவது - இரவுக்குறிக்கண்வந்த தலைமகன் அல்ல குறிப்பறிதலால், இடையீடுபட்டுப்போதல்; அஃது அல்ல.குறியெனவும் வருந்தொழிற் கருமையெனவு மிரண்டுவகைப்படும்; அவை வருமாறு. இடையீடுபடுதல்குறி தவறுதல். இறைவிக்கிகுளை யிறைவர வுணர்த்தல். (இ-ள். மறுநாளிரவில் தலைவன் வருதலைத் தலைவிக்குப்பாங்கி கூறுதல். பொன்னாக மேனிப் புணர்முலை யாயென்கொல் பூவரசர் மன்னாக வந்தவெம் மான்ஷம்சுத் தாசீன் மருவலர்போற் புன்னாக சேக்கைப் புறம்விடுத் திவ்விருட் போதிலன்னத் தன்னாகஞ் சோரச் சலியா தெழுந்து தழங்கின்றதே. (/94) தான் குறி மருண்டமை தலைவியவட் குணர்த்தல். (இ-ள். தலைவிதான் அல்ல குறியிடத்துத் தலைவனைக் காணாமையால் மீண்டு யங்காலத்துவந்து பாங்கியுடன் கூறுதல். அல்லதுறியிடம் குந்தவறிய வி. i. உள்ளற் கெளிதல வேறோர் குறியையென் னுட்கமல வள்ளற் குறியென மானித் தெழுந்து மலைகடலுங் + 2 +