பக்கம்:ஷம்சுத்தாசீன் கோவை (கவிதைகள்).pdf/179

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

முழுக்கும் பெரும்புகழ் வேள்வும்சுத் தாசீன் முதிர்கிரியா யிழுக்கு மவரெவர் யாமறி யேமென்று மேந்திழையே. (399) - காமக் கிழத்தியைக் கண்டமை பகர்தல். (இ-ள்.) தலைவி அப்பரத்தைமாரைப் பார்த்ததைத் தலைவனுக்குக் கூறுதல். மறுகுறப் போந்த மதலையைக் கண்டொரு மங்கைதன்மார் பிறுகுறச் சேர்த்தன்னை யானுமென் றாளுண்மை யென்றெதிர்த்தோர் சிறுகுறச் செய்யுமிக் கோன்ஷம்சுத் தாசீன் சிமையவெற்பிற் குறுகுற நான்முகங் கோடின ளோடினள் கொற்றவனே. (400) தாமக்குழலியைப் பாங்கி தனித்தல். (இ-ள்.) தலைவி கோபத்தைப் பாங்கி தணித்தல். பணிவாற் பகையறு மென்பரன் பாற்சிரம் பார்த்திபருன் மணிவார் சிலம்படி வைத்துநின் றாரினி மாற்றலரைத் துணிவாய்ப் பொருபெரு மான்ஷம்சுத் தாசீன் சுடர்க்கிரிவாய்த் தணிவாய் மதிமுகத் தையனல் லாயவர் தங்குறையே (40/) தலைமகள் புலவி தணியாளாகத் தலைமகனுாடல். (இ-ள்.) பாங்கி அங்ங்னந் தணித்தும் தலைவி யூடல் தணியாமை கண்டு தலைவன் ஊடுதல். - கொல்லுங் களிறுங் குரைபுன லாறுங் குறுகுமந்நாட் புல்லு மவளிவ ளோவெதிர் நாமென்ன போந்தனமோ வில்லுங் கணையுங்கொள் வேள்வடிம்சுத் தாசீன் வியன்சிலம்பி லொல்லு மனமே யொழிவா யிவடரு முண்மையையே. (402) தலைவி யுணர்ந்து தலைவனையிகழ்தல். (இ-ள்.) தலைவி தெரிந்து தலைவனை அன்பில்லாய்! நீ கொடியாயென் ಹpಹಣ கூறுதல். - அங்குறை வேசைய ராசையென் செய்தனை யன்றியுமிங் கெங்குறை யாதுகண் டாயுரை யாயொன்றின் றென்றுமலர்க் கொங்குறை தோட்டுனைக் கோன்ஷம்சுத் தாசீன் குளிர்வரைவாய்த் தங்குறை காண்கிலர் காண்பார் பிறர்குறை சத்தியமே. (403) வெள்ளணி ய்ணிந்து விடுத்தல் முதல் தலைவி யுணர்ந்து தன்லவனை யிகழ்த லீறாகிய இப்பதினைந்து துறைகளும் உணர்த்த வுணராஆடற்குரியன. 175