V.S.T. முஹம்மது இபுராஹிம் தரகனார் ஷம்சுத்தாசீனவர்களின் o மூன்றாவது 05675 > 159-1905-ல் இவர் பிறந்தார். v.S.T. ஹாமீம் பள்ளி மதரசாவின்ட்ர்ன் அக்தாராக் இருந்து த மது தந்தையவர்கள் நிறுவிய வணிக நிலையங்களில் பொறுப்புகள் வகித்து வந்த! இவர் தலைசிறந்த வணிகராக விளங்கினார். 1930-ல் காங்கிரஸ் இயக்கத்தில் சேர்ந்து, 1930, 1932, 1940, 1942 ஆகிய ே வருடங்களில் நடைபெற்ற சுதந்திரப் போராட்டங்களில் கலந்து கொண்டு சிறை சென்றவர். ', ': ': . . . . . . இவர் ஆனரெரி பெஞ்ச் மாஜிஸ்ட்ரேட்டாகவும் பஞ்சாயத்து கோர்ட்டின் துணைத் தலைவராகவும், மேலப்பாளையம் டவுண் காங்கிரஸ் கமிட்டி தலைவராகவும். மேலப்பாளையம் பஞ்சாயத்து போர்டு தலைவராகவும், மேலப்பாளையம் முஸ்லிம் அலோசியேஷன் கமிட்டி உறுப்பினராகவும், திருநெல்வேலி தாலுகர் காங்கிரஸ் கமிட்டி உறுப்பினராகவும், மேலப்பாளையம் நகர்மன்றத் தலைவராகவும் பணியாற்றியவர். . - அரசியல் சாணக்கியர் என்று அழைக்கப்பட்ட இவர், முதலமைச்சராக இருந்த பெருந்தலைவர் காமராசரை ம்ேலப்பாளையத்திற்கு அழைத்து வரவேற்பு அளித்து, குடிநீர் இன்றித் தவித்த இவ்வூர் மக்களின் அவல நிலையை எடுத்துச் சொல்லி, குடிநீர்ப் பிரச்சினை தீர்க்கப்பட காரணமாக இருந்தார். . V.S.T. ஹாமீம் பள்ளி மதர்சாவுக்குச் சொந்தமான பரந்த அளவிலான இடம் இதற்கென நன்கொடையாக வழங்கப்பட்டு அவ்விடத்திலே குடிநீர்த் தொட்டிகள் அமைக்கப்பட்டுள்ளன. தாம் கொண்ட கொள்கையில் உறுதிமிக்கவராயும், ஏழைகளின் தோழராயும் விளங்கி, அறப்பணிகளுக்கு பெருமளவு நன்கொடைகளும் வழங்கியுள்ள இவர் தமது எண்பத்திரண்டாவது வயதில் காலமானார். - V.S.T. M.E. முஹம்மது சதக்கத்துல்லாஹ் V.S.T.M. ஷம்சுத்தாசீன் E.M.C.(அக்தார்:v.S.T. ஹாமீம்பள்ளிமதரசாNSா.M.நாகூர்மிறாv.S.T.ME முகைதீன் ஷெய்கு மன்சூர் ஆகியோர் இவரது புதல்வர்களாவர்.
- 'தமிழ்முரசு' மேலப்பாளையம் நகர சிறப்பு மலர், 30-8-1999, பக். 4.
23