பக்கம்:ஷம்சுத்தாசீன் கோவை (கவிதைகள்).pdf/34

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தமிழ் இலக்கியத்தின் பல்வேறு பிரிவுகளுடன் தொடர்புடைய நூல்களை இயற்றி தமிழுக்குப் புகழ் சேர்த்த முஸ்லிம் புலவர்கள் பலரைப் பற்றியும், அவர்தம் படைப்புக்கள் பற்றியும் வளரும் தலைமுறை அறிந்து கொள்ளும் வாய்ப்புக்கள் குறைந்து வருகின்ற வேளை இது. இந்தச் சந்தர்ப்பத்தில் அறியப்படாமல் மறைந்துபோன தமிழ் நூல்களை மறுமதிப்புச் செய்வது ஒரு அரிய தமிழ்ப்பணியாகும். அந்த முயற்சியில் ஈடுபட்டுப் பெரிதும் உழைத்திட்ட சகோதரர் ஜனாப்.செ.திவான் அவர்களுக்கும், அந்த நூலை மேலப்பாளையம் V.S.T.தமுஸ்தாசிம் தரகனார் அறக்கட்டளை சார்பில் இலவசமாக வெளியிட்ட அறக்கட்டளையினருக்கும் வாழ்த்துக்களைத் தெரிவித்துக்கொள்கிறேன். எம். ஜமால் முஹம்மது தலைவர் முஸ்லிம் அனாதை நிலையம்