பக்கம்:ஷம்சுத்தாசீன் கோவை (கவிதைகள்).pdf/82

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மலையாளங் கண்டந்தக் கோட்டா றடைந்தன மாமதன்வாய்ச் சிலையாளஞ் செய்தரு தேரூர் தெரிந்தினிச் சேருதுமே. (/8) கலவியின் மகிழ்தல். (இ-ள்.) தலைவன் தலைவியைக் கலத்தலான் மகிழ்தல். திடங்கண்ட வாணர்பி ரான்ஷம்சுத் தாசீன் செழுங்கிரிசேர் விடங்கண்ட வேல்விழி மாதர சேயுன்றன் மெய்படுமோ ரிடங்கண்ட சொர்க்கந்தந் தின்பக் கனியமு திந்தெனையுன் றடங்கண்ட வாநந்த வெள்ளத்து ளாழ்த்த தகைமைநன்றே. (/9) புகழ்தல். (இ-ள். தலைவியினது நலத்தைத் தலைவன் வியந்து பாராட்டல். குன்றா மணிப்புயக் கோன்ஷம்சுத் தாசீன் குளிர்வரைவாய் மின்றா ரணிகுழ லேயர விந்தமுன் மெல்லடிச்சி ரொன்றார வாடி யலைவாய்ப் பயமலிந் தோங்கு கண்ணிர் பொன்றா திறைத்தொரு கானின்றண் ணாந்தங்கண் பூத்ததுவே. (20) இப்பதினாறு துறைகளுள், இரந்து பின்னிற்றற் கெண்ணல் முதல் நீடுநினைந்திரங்கலிறாகிய பத்தனுள், வழிபாடு மறுத்தலொழிந்த ஒன்பதும் வேட்கை யுணர்த்தற்கும், வழிபாடு மறுத்தலொன்றும் மறுத்தற்கும், மறுத்தெதிர்கோடலும் வறிதுநகை தோற்றலுமாகிய இரண்டும் உடன்படற்கும், ஏனைய நான்குங் கூட்டத்திற்கு முரியன. - இயற்கைப் புணர்ச்சி முற்றிற்று. வன்புறை அஃதாவது-தலைவி ஐயுற்றவழி ஐயந்திரத்தலைவன் வற்புறுத்திக் கூறல்: அஃது-ஐயந்தீர்த்தல், பிரிவறிவுறுத்தலென இருவகைப்படும்; அவை: ஏற்புறவணிதல் முதல் இடமணித்தென்ற லீறாகிய ஏழுவிரிகளையுடையன. அவை வருமாறு:- - ஏற்புற வணிதல். (இ-ஸ்.), புணர்ச்சியிடத்துத் தலைவி புனைந்த முத்தார முதலிய கொங்கையணி குழலணிகள்வேறுபட்டவற்றைத்தலைவன்றன்கையினால்வேறுபாடுதிரப்புனைதல். பொன்னணி சேர்புயத் தோன்ஷம்சுத் தாசீன் பொலன்கிரிவாழ் மின்னணி நுண்ணிடை மெல்லிநல் லாயுண் மெலிந்திரங்கேன் 78