பக்கம்:ஷம்சுத்தாசீன் கோவை (கவிதைகள்).pdf/95

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தகையணங்குறுத்தல். (இ-ஸ்.) தலைவியினது வேற்றழகு கண்டு அவளைத் தெய்வப் பெண்ணாகப் பாங்கி வலியுறுத்திக் கூறுதல். காவே புகுந்து கழங்காடி யாடிக் கதித்தசுனைப் பூவே கொணருமென் பொன்னுருப் போன்றுமிப் பூதலத்தோர் கோவே யெனவரு வோன்ஷம்சுத் தாசின் குலக்கிரிமின் றேவே வெளுத்திதழ் மெய்பசந் தக்கஞ் சிவந்தனையே. (70). நடுங்க நாட்டம். (இ-ள்.) தலைவி நடுங்கத்தக்கதாகப் பாங்கி யாராய்தல். பொய்யா மொழித்திறத் தோன்ஷம்சுத் தாசீன் பொதியைமலர்ச் செய்யா ளெனவொளிர் சேயிழை யிரவன் செம்பொன்மழை பெய்யா விருந்து பிறங்கிச் சிவந்த பெருங்கரம்போன் மையார் களிற்றொரு கோடுகண் டேமன மாழ்கினனே. /7/ノ・ இத்துணையு மூன்றாநாள் நிகழ்ச்சி யென்க. குறையுறவுணர்தல். அஃதாவது - தலைவன் தழை முதலியவற்றைக் கொண்டு தன்பாற் குறை யுற்று நிற்பக் கண்டு பாங்கி அதனானே கூட்டமுண்டென்றறிதல்; அது: தேர்தல் தெளிதலென இருவகைப்படும். தேர்தல்-ஆராய்ச்சி செய்தல். அவை வருமாறு: பெட்டவாயில் பெற்றிரவு வலியுறுத்தல். (இ-ள்.) இயற்கைப் புணர்ச்சிக்குப் பின்னர்ப் பிரிவுழிக் கலங்கலின் வாயில் பெற்றுய்த லென ஆண்டு விரும்பப்பட்ட பாங்கியைத் தலைவன் துதாகப் பெற்றுக் குறையிரத்தலை வற்புறுத்திக் கூறுதல். பொருளா லறமும் பொலிவாற் புகழும் பொருந்துறல்போற் றெருளா லுயர்ந்தபி ரான்ஷம்சுத் தாசீன் செழுஞ்சிலம்பி லிருளா மதிமுகத் தேந்திழை தன்னுயி ரென்னுமிவ ளருளாற் ப்ெறலா மகமே யவட னருந்தனமே. (72) ஊர் வினாதல். (இஸ்.) தலைவன்கண்ணியுந்தழையுமேந்திக்குறையுற்றவன்போலவந்துநின்று ஊர்யாதென்று பங்கியைக் கேட்டல். மதியே நிகர்த்த மலர்முகத் தீர்வ்ண்மை வாயந்தவிரு நிதியே யெனவருள் வோன்ஷம்சுத் தாசி னெடுவரைக்கோர் 91