பக்கம்:ஷம்சுத்தாசீன் கோவை (கவிதைகள்).pdf/98

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

என்னுயிர் மாதங்க மன்றியொர் மாதங்க மிர்ங்கனையுந் தன்னுயி ருங்கொடு சார்ந்ததின் ராலென்றுந் தாரணிக்கோர் மன்னுயிர் மாணவத் தோன்ஷக்சுத் தாசீன் மணிவரைவாய்ப் பொன்னுயிர் போலும் புனிதமற் றேது புகலுதற்கே, (82) இறைவனை நகுதல். (இ-ள்.) தலைவனப்பாற் சென்றானாகப் பாங்கி தலைவியை நோக்கி அசதியாடல். அசதியாடல் - சிரித்துப் பேசுதல். - தழையா லொருகரி தான்படு மோகடற் றாணியின் மழையா லிருமர மாய்வுறு மோவிவர் மாற்றமென்றுங் குழையாப் பெருந்தவக் கோன்ஷம்சுத் தாசீன் குளிர்வரைவாய்ப் பிழையாங் கபடாம் பிரித்தெடுத் தாயினெம் பெண்ணனங்கே. (83) பாங்கி மதியினவரவர்மனக்கருத்துணர்தல். - (இ-ள்.) பாங்கி தன்னறிவால்தலைவன்தலைவியென்ற இருவர்மனக்குறிப்பை யாராயதல, வாயாற் கலையும் வனைவாற் புனமு மகிழ்ந்திருவ ராயா வறினு மகமோ மயல்கொண் டலைதருங்கண் னோயா துறுகுறை யாவு முரைக்கு முலகனைத்துந்: தாயாய்ப் புரந்தளிப் போன்ஷம்சுத் தாசீன் றடத்தகத்தே. (84) இவ்வைந்து மிருவருமுளவழி யவன் வரவுணர்தலின் விரியென்க. பாங்கிமதி யுடன் பாடு முற்றிற்று. பாங்கியிற் கூட்டம் அஃதாவது பாங்கியாற் கூட்டுவிக்கத் தலைவன் தலைவியைக் கூடுங் கூட்டம், அஃது இரந்து பின்னிற்றல் சேட்படை மடற்கூற்று மடல்விலக்கு உடன்படல் மடற்கூற்றொழிதல் குறைநயப்பித்தல் நயத்தல் கூட்டல் கூடல் نة سانديون بيي வேட்டல் எனப் பன்னிரண்டு வகையினையுடைத்து; அவை வருமாறு: தலைவனுட்கோள் சாற்றல். (இ-ஸ். தலைவன்தான் தன்னுள்ளத்தின்கட் கொண்டகாதலைக் கூறுதல். கண்டே நிகர்த்த கனிமொழி யிர்சொலிற் கற்பகமுங் கொண்டே வருவ லிருநிதி யென்னோ குறுகலர்நாற் 94