பக்கம்:ஷம்சுத்தாசீன் கோவை (கவிதைகள்).pdf/99

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

றண்டே பணிபதத் தோன்ஷம்சுத் தாசீன் றடத்திடைநுந் தொண்டே பணிப்பத் துணைபுரிந் தாலுண்டென் றோத்திரமே. (35) பாங்கிகுலழறை கிளத்தல். (இ-ஸ்.) தலைவன் இவ்வாறு கூறியதற்குப் பாங்கி குலமுறைமையா லியையாதென மறுத்துக் கூறுதல், புனமே புவனம் பொதுவறக் காத்திவண் போந்ததுந்தங் கனமே சிறுமை கருதிலை நாளுங் கருதலர்க்கு வனமே தரும்பெரு மான்ஷம்சுத் தாசீன் மலையவெற்பி லினமே யறிதி யிழிந்தோர்க் குயர்ந்தோ ரியைபிலரே. (86) தலைவன்றலைவி தன்னையுயர்த்தல். (இ-ள்.) தலைவன் தலைவியை யுயர்த்திக்கூறுதல். சிப்பியின் முத்தமுஞ் சேற்றுண் மரையுஞ் செனித்திடினு மொப்பியிங் கேற்கில் ருண்டுகொ லோவுல குங்ககனுஞ் செப்பிய மாதவத் தோன்ஷம்சுத் தாசீன் சிலம்பனையி ரப்பிய நன்னல மல்லா லிலைகுல மாயிழைக்கே. (87) பாங்கி யறியாள்போன்று வினாதல். (இ-ஸ்.) தலைவன் தலைவியிடத்துக் காதல்கொண்ட தறியாள் போல நீ எவளிடத்துக் காதல்கொண்டாயெனப் பாங்கி வினாதல், சுனையும் பொழில்கழங் கூசல்பந் தோடலர் சூழ்ந்தெழிலம் மனையும் பயிலுநர் பற்பல ரான்மத மாரிசிந்தி முனையுங் கடகளிற் றோன்ஷம்சுத் தாசீன் முழுமலைக்கென் றனையு மறைத்துனைத் தான்மறை யாரெவர் தார்மன்னனே. (88) இறையோனிறைவி தன்மையியம்பல். (இ- ள்.) தலைவன் தான் காதலித்த தலைவி தன்மை சுறுதல்தன்மை - இலக்கணம். - மருளும் பிணைவிழி மாகுஞ் சாமுலை வாய்குமுத மிருளும் புயல்குழ ல்ேதின் மதிமுக மென்றுமின்று மருளுந் திருக்கரத் தான்ஷம்சுத் தாசி னருட்சிலம்பிற் றெருளும் பொலிவுங்கொள் சேயிழை யேயென்றன் றேமொழிக்கே (89) 95