பக்கம்:ஹிராடெடஸின் நம்மை மேம்படுத்தும் எண்ணங்கள்.pdf/65

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

நம்மை மேம்படுத்தும் எண்ணங்கள்

63



அதற்குப் பிறகு, ஹர்பகஸ் விட்ட படகை ஓர் ஆட்டிடையன் கண்டு குழந்தையைக் காப்பாற்றி வளர்த்தான்.

கி.மு. 569 ஆம் ஆண்டின் போது, குழந்தையைக் காப்பாற்றிய் மித்ரடேடிஸ் என்ற அந்த ஆட்டிடையன் அங்கு தற்செயலாக வந்து இறந்த தனது குழந்தையை ஹர்பகசிடம் தந்து அரசனின் பேரனைப் பெற்றுக் கொண்டு போய் பத்து வயது வரை வளர்த்தான். இறந்த குழந்தையை ஹர்பகஸ் ஒரு படகிலே பெட்டியில் வைத்து மூடி மிதக்க விட்டு விட்டான்.

இறந்த ஆட்டிடையன் குழந்தையை ஹர்பகஸ் வாளால் வெட்டி அதை அஸ்டிய கெசுக்குக் காட்டி ஏமாற்றிவிட்டான். கருணை உள்ளம் கொண்டும், சிறு குழந்தையை வெட்டிவிட மனமில்லாமலும் அவன் அவ்வாறு செய்தானே அல்லாமல் அரசனை வேண்டும் என்றே ஏமாற்றுவதற்காகச் செய்யவில்லை. ஆனால், மன்னன், தன்னை ஹர்பகஸ் ஏமாற்றி விட்டதாகத் தவறாக எண்ணி விட்டான்.

இவ்வாறு தன்னை தளபதி ஏமாற்றியதற்காக, ஹர்டகஸின் மகனையே கொன்று, அவனுக்கே அரண்மனையில் அஸ்டிகெஸ், பிள்ளைக் கறியமுது விருந்து வைத்தான். இந்தக் கொடூரச் செயல் நமது பெரிய புராணத்தில் வரும் சிறுதொண்டர் நாயனார் தனது குழந்தையையே வெட்டிப் பிள்ளைக் கறி விருந்து சிவபெருமானுக்கே வைத்த சம்பவத்தை நினைவூட்டுகின்றது.

அஸ்டியகஸ் தனது மகனைக் கொன்று தனக்கே விருந்து வைத்ததைக் கண்டு ஹர்பகஸ் மனம் பதறி, மன்னனைப் பழிக்குப் பழிவாங்கிட வஞ்சம் கொண்டு, சைரஸ் மன்னன் படைக்கு தலைமையேற்று, அஸ்டியகெசைத் தோற்கடித்துச் சிறைப் பிடித்து அடிமையாக்கி, சிறையிலேயே அவனைச் சாக வைத்தான் என்று ஹிராடெடஸ் தனது வரலாற்றுக் குறிப்புகளில் கூறியுள்ளார்.