பக்கம்:ஹிராடெடஸின் நம்மை மேம்படுத்தும் எண்ணங்கள்.pdf/66

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

64

ஹிராடெடஸின்


12. உலக மக்கள் இடையே தமிழர் பழக்க வழக்கங்கள்

உலக மக்களால் ஏற்றுக் கொள்ளப்பட்ட இந்தியர்களுடைய, குறிப்பாகத் தமிழர்களுடைய பழக்க வழக்கங்களை ஹிராடெடஸ் ‘வரலாறுகள்’ என்ற தனது நூலில் குறிப்பிட்டுள்ளார்.

★ கோயில்களில், குறிப்பாகச் சில அம்மன் கோயில்களில் குறிகேட்டு, சம்மதம் பெற்று அதன் வழி நடப்பது. இது அருள் வேட்டல் என்ற பழக்கத்தின் சாயலாகும். தெய்வ அருளால், யானை எவருக்கு மாலை அணிவிக்கின்றதோ அவரை அரசாராக ஏற்றுக் கொள்ளும் பழக்கம்.

★ தமிழர்களின் பழக்கம் கனவுக்குப் பலன் கூறுவது. நல்ல கனவாக இருந்தால் அதைப் பெரியோர்களிடம் கூறி, அவர்களிடம் அறிவுரை, பெறுதல். கெட்ட கனவாக இருந்தால் முகத்தைக் கழுவிக் கொண்டு, கடவுளை வணங்கி, மீண்டும் உறக்கம் கொள்ளுவது. தீய கனவுகளுக்கு ஏதாவது சடங்குகள் செய்வதானால் அவற்றைச் செய்து தீக் கனாவுக்குப் பரிகாரம் காண்பது.

★ போர்க் காலங்களிலும், சுயம்வரம் நேரத்திலும் பெண்களைக் கவர்ந்து சென்று திருமணம் செய்து கொள்வது. இதற்குரிய சான்று வடநாட்டில் பிருதிவி ராஜ், ராணி சம்யுக்தை சம்பவங்கள்

★ இந்திய நாட்டு ரிஷிகள், சாபம் கொடுக்கும் முறை. எடுத்துக்காட்டாக, பிறன் மனை புகுந்த தேவேந்திரனைக் கெளதம் மகரிஷி, இந்திரன் உடலெல்லாம் பெண் யோனிகளாகக் கடவது என்று சாபம் கொடுத்துள்ளது.