பக்கம்:ஹிராடெடஸின் நம்மை மேம்படுத்தும் எண்ணங்கள்.pdf/67

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

நம்மை மேம்படுத்தும் எண்ணங்கள்

65


★ பெரிய புராணம் என்ற நூலை எழுதிய சேக்கிழார் பெருமான், பிள்ளைக்கறி அமுதை சிவபிரானுக்காகக் கறி சமைத்து விருந்து படைத்த வரலாறை எழுதியிருப்பது; வரலாற்றின் ஒரு சாயலே, குறிப்பாக, ஹிராடெடஸ் எழுதிய குறிப்பின் சாயலைச் சார்ந்துள்ளது.

★ தமிழ் நாட்டுக்கோயில்களில் தினந்தோறும் ஆறுகால பூசைகள் நடப்பது; தேர், திருவிழா, இறை ஊர்வலம், மக்கட்கூட்டம் கூடுதல் போன்றவை. சிலை செய்தல் உருவ வழிபாடு, கோயில் கட்டுதல், தமிழர்களின் பழம் பெரும் கால வழக்கேயாகும். எடுத்துக் காட்டாக, தஞ்சைப் பெரியகோயில், மதுரை மீனாட்சி கோயில், மாமல்லபுரம் சிற்பக் காட்சிகள் போன்ற எண்ணற்ற சம்பவங்கள் உள்ளன.

★ தமிழ் நாட்டு ஆலயங்களில், ஐந்து கருவிகளில் புல்லாங்குழல் ஊதுதலும் ஓர் இசையாக நடந்து கொண்டிருக்கின்றது.

★ நாம் பிறந்த நாடு வாழ, நாமும் வாழ்வோம் என்பது தமிழ் மக்களின் சிறந்த ஒரு கொள்கையே ஆகும்.

★ கடவுள், சிறு தெய்வங்கள் கிராம தேதைகள் எல்லாம் அவைகட்குப் படைக்கும் படையல்களை நேரில் வந்து உண்பதானது தமிழர்களின் சிறப்பான கருத்தாகவும், மரபாகவும் இன்றும் உள்ளது.

★ தமிழர்களில் பெரும் பான்மையானவர்கள், குறிப்பாகக் கிராம மக்கள், விலங்கினங்களுக்கு அதாவது பசு, நாய், காக்கை போன்றவைகளுக்கு பிடிசோறு அல்லது வயிறாற சோறு வைப்பது உண்டு. மாட்டுப் பொங்கலன்று தமிழர்கள் மாடு கன்றுகளுக்கு உணவை வலிய ஊட்டிய பின்பே தாம் உண்பார்கள். பிறநாட்களில் அவைகட்குரிய சோற்றுணவை ஒதுக்கியும் வைப்பார்கள்.