இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.
60
ஹெர்க்குலிஸ்
மிருந்த விஷம் தோய்ந்த அம்புகளில் ஒன்றை வில்லிலே மாட்டி, அவனுடைய மூன்று உடல்களையும் ஒரே சமயத்தில் துளைக்கும்படியாக அதைச் செலுத்தினான். ஒரு கணத்திற்குள், என்ன நடந்த
தென்று அசுரன் உணர்ந்துகொள்ளுமுன்பே, பாணம் அவன் உடல்களை ஊடுருவிப் பாய்ந்துவிட்டது! விஷம் அவனுடைய மூன்று தலைகளுக்கும் ஏறிவிட்டதால், அவன் தரையிலே உருண்டு விழுந்துவிட்டான்.
ஹெர்க்குலிஸும், நண்பர்களும் அசுரனுடைய ஆடுகளையும் மாடுகளையும் ஓட்டிக்கொண்டு, ஹீலியஸின் கிண்ணத்தில் முன் போல் ஏறித் தங்கள் நாட்டை நோக்கிப் புறப்பட்டார்கள். வழியிலே அவர்கள் பல நாடுகளைக் கடந்து சென்றனர். சில