இப்பக்கத்தில் நுட்ப மேம்பாடு தேவை
49
பின்னரே தாலி கட்டுவர். தாலி கட்டாது போயினும் மாலை
யிட்டாலே மணமாயிற்று. பூவைக் கண்டவர் எவரும் பறித்துச்
சூடுவது போன்று மணஞ்செய்து கொள்ளாது கூடிப்புணர்பவள்
"பூவிலைப் பெண்டு" எனப் பூவால் குறிக்கப்பட்டாள்.
- வாழ்வியலில் மட்டுமன்றி வணிகத்தையும் மலர் வைத்தே
தொடங்கினர். தொழிலையும் பூ இட்டேபுனைந்தனர். பொறிகட்கும்
படை க்கலன்களுக்கும் பூச்சூட்டிப் போற்றினர்.
- பொன்னிருந்தால் பொன்னிலே பூத்தொழில் செய்தனர்
- பொன்னில்லையேல் பொன்னிருந்த இடத்தில் பூவை
- வைத்தனர்;
- மணத்திற்கும் பூ; பினத்திற்கும் பூ.
- வாழ்த்தலுக்கும் பூ; வழுத்தலுக்கும் பூ.
- விழாவுக்கும் பூ; இழவுக்கும் பூ.
- பொழுதறியவும் பூ; தொழுதமையவும் பூ.
- பேரிலும் மலர்ப்பெயர்; ஊரிலும் மலர்ப்பெயர்.
- உவமைக்கும் மலர்; உணவிற்கும் மலர்.
- மருந்துக்கும் மலர்த்தேன்; மயக்கத்திற்கும் மலர்த்தேன்.
- சொல்லும் ஒரு மலர்; பாவும் ஒரு மாலை.
- போற்றுவதற்கும் 'பூமான்' என்றொரு பூச்சொல்;
- துாற்றுவதற்கும் 'பூ இவ்வளவுதானா' என்றொரு
- பூத்தொடர்.
- வாழ்வின் நடைமுறைகளில் எல்லாம் பூவிற்கு இடமளித்
தனர். இங்கு எழுதப்பட்ட ஒவ்வொரு கருத்துக்கும் பெருமைக்
கும் தமிழ் இலக்கியத்தில் இடம் உண்டு.
- இதன் விரிவாக இந்நூல் விரிகின்றது. எனவே இது
வரை காணப்பட்ட இப்பகுதி முன்னுரை எனலாம். இங்கே
குறிக்கப்பட்ட கருத்துகளுக்கு விளக்கமும் விரிவும் சான்றுமாக
வரும் பகுதிகள் அமையும்.
- அவ்வமைப்பும் மரபையும், முறையையும் நெறியாகக்
கொண்டது. தமிழர் மலரோடு இழைந்தனர். மலரால் மரபு
களைக் கண்டனர். அம் மரபில் மலர்களை முறைப்படுத்தின்ர்.
*4