பக்கம்:1915 AD-பாடற்றிரட்டு, வ உ சி.pdf/19

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

ஸ்ரீ வ. உ .சிதம்பரம்பிள்ளையவர்கள்
பாடற்றிரட்டு.



ஈகை.


இல்லார்க் கிரங்கியுட னீவதுதா னீகையில்லா
ரல்லார்க் களிப்பதஃ தன்றாகு - மல்லாம
லீவதனா னற்புகழு மீயாமை யாலிழிவு
மாவதுன்னி யீவதுமஃதன்று.

இல்லார்க்கொன் றீவதுவே யீகையா மெக்காலு
மல்லார்க்கொன் றீவதுதா னாங்குவிலை- சொல்லாமல்
வாங்கிவைத்த வாங்குகிற வாங்கநின்ற மாபொருட்கு
வாங்குகவென் றேயளிக்கு மாற்று.

இல்லார்க்கு வேண்டுவதொன் றீயுங்கா லேற்றிடுமவ்
வில்லார்க்கு மீபவர்க்கு மேனையர்க்கு - மெல்லார்க்கு
மின்பமது தானுதிக்கு மில்லாரல் லார்க்கீயி
னின்பமதி லெத்துணையு மில்.

ஈதலினால் வீடதனை யெய்துவரென் றான்றோர்மு
னோதினரா லவ்வுரையி லுண்மையுறற் - கேதுவுள
தெற்றென்று சற்றுன்னி னீதலினாற் சாருநமைப்
பற்றின்மை யன்புடைமை பார்.

3