பக்கம்:1916 AD-மனம் போல வாழ்வு, வ உ சி.pdf/13

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

பாயிரம்



களிலிருந்து எடுத்துக் காட்டி இதன் பொருள் கற்போரது உள்ளத்துட் பதியுமாறு செய்தலே இதனைக் கற்பிக்கும் முறை, அறத்தையோ பொருளையோ இன் பத்தையோ வீட்டையோ அடைய விரும்பும் தமிழ் மக்கள் ஒவ்வொருவரும் இதனைக் கற்றற்கு உரியர். இதில் கூறப்பட்டுள்ள பொருள்களைக் கசடறக் கற்று உள்ளத்துட் கொண்டு கடைப்பிடித்து ஒழுகுதலே இதனைக் கற்கும் முறை.

போர்ச்சுகீஸ் கீழ் ஆபிரிக்கா, பெயிரா நகரில் தற்காலம் வசித்துவராநின்ற எனது மெய்ச் சகோதரர் ஸ்ரீமாந்..வீ.சா.நடராஜபிள்ளை யவர்கள் எனக்கு அளித்த பொருளுதவியைக்கொண்டு இஃது அச்சிடப் பெற்றது. அவ்வுதவியைச் செய்ததற்காக அவர்களுக் கும். அவ்வுதவியைச் செய்யுமாறு அவர்களைத் தூண்டியருளிய எனது மெய்ச் சகோதரர் தில்லையாடி ஸ்ரீமார். த. வேதியப்பிள்ளை யவர்களுக்கும், யான் கஞ்ஞான்றும் நன்றிசெலுத்தக் கடமைப்பட்டுள்ளேன்.

பிரம்பை, சென்னை, இராசுஸதை } வ.உ. சிதம்பரம் பிள்ளை.

12